தொடர்ந்து அபியிடம் போட்டுக் கொடுக்கும் கண்மணி.! தனது மகள் பற்றி தெரியாமல் தவிக்கும் வெற்றி.! பரபரப்பான எபிசோடுகளுடன் தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் இன்றைய எபிசோடு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தென்றல் வந்து என்னை தொடும் இன்றைய எபிசோடில் சுடர் அபியிடம் பேச வேண்டும் என அடம் பிடிக்க விஜி போன் செய்து அபி வேலையா இருக்கியா என்ன கேட்கிறார் அதற்கு இல்லக்கா என கூற சுடர் பேசணும்னு அடம் பிடிக்கிறார் பேசு என சொல்ல சுடரும் அபி உன்னை யாரும் கடத்திட்டு போகலையே என கேட்கிறார் பிறகு அபியும் இல்லை ஒரு வேலை விஷயமா தான் நான் வந்து இருக்கேன் என்ன சொல்ல பிறகு விஜி அம்மாவிடம் நான் எப்பொழுது உன்னிடம் பேச வேண்டும் என்று கேட்டாலும் தர சொல்லு தரவே மாட்டேங்கிறாங்க என்ன சொல்ல நான் வேலையா இருப்பேன் அதனாலதான் விஜி அம்மா தர மாட்டாங்க என கூறுகிறார்.

அப்பனா உன்கிட்ட பேச முடியாதா என கேட்க கண்டிப்பா முடியாது என கூறிவிட்டு போனை வைத்து விடுகிறார். பிறகு வெற்றி நின்று கொண்டிருக்க வெற்றியுடன் சுடரை தேடி வரும் அந்தப் பையன் வருகிறார் உன்னுடைய அப்பா, அம்மா எங்க என கேட்க அவுங்க மருத்துவமனையில் இருப்பதாக சொல்கிறார் பிறகு அந்த 500 ரூபாயை நான் போய் எடுத்துட்டு வந்துட்டேன் நீங்க உங்க பணத்தை வச்சிக்கோங்க எனக் கொடுக்க அது எல்லாம் ஒன்னும் வேணாம் நீயே வச்சுக்க செலவுக்கு என்ன கூறிவிடுகிறார்.

பிறகு அந்த பையன் அபி அங்கு இருந்ததை எல்லாம் உண்மைதான் ஆனால் அவங்க பரீட்சை எழுதினது டவுன்ல என சொல்ல இந்த உண்மை உனக்கு எப்படி தெரியும் என கேட்கிறார். இந்த 500 ரூபாய் பணத்தை எடுக்க சென்ற பொழுது அந்த வயதானவர் தனது பேரனிடம் அனைத்து உண்மையையும் சொல்லிக் கொண்டிருந்தார் எனவே அபிக்கு பக்கத்து கிராமத்தில் தான் பிரசவம் ஆகி இருக்க வேண்டும் என கேட்க பிரசவம் பார்ப்பவரை உனக்கு தெரியுமா என கேட்கிறார்.

இங்கு பக்கத்தில் இருக்கும் கிராமத்தில் ஒரே ஒரு பாட்டி மட்டும் தான் பிரசவம் பாப்பாங்க எனக்கு தெரியும் எனக் கூற நல்ல விஷயத்தை சொல்லி வெற்றி சந்தோஷப்பட்டு பக்கத்துல கிராமத்திற்கு கிளம்புகிறார்கள். இவ்வாறு இதனை தெரிந்துக் கொண்ட கண்மணி அபிக்கு போன் செய்து அனைத்து உண்மைகளையும் சொல்லி விடுகிறார். அபியும் கபிலனை அழைத்துக் கொண்டு வெற்றி செல்லும் அதே பக்கத்து கிராமத்திற்கு செல்கிறார் போகும் வழியில் வெற்றி நான் மூணு நாலு தான் இங்கு இருந்திருப்பேன் என்ன வெயில் அடிக்குது என்னாலேயே தாங்க முடியல நிற மாச கற்பனியா இருந்துகிட்டு அபி இதெல்லாம் எப்படி தாங்கி கேட்டா எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பா எப்படிப்பட்ட நல்ல மனசு அவ்வளவு மன்னிக்கவே மாட்டா அவ கஷ்டப்பட்டு இருக்கலாம் நான் தான் அனுபவிக்க வேண்டும் சுடர்தான் என்னுடைய மகள் என எனது உயிரும் சொல்லுது என பலவற்றை நினைத்துக் கொண்டே செல்கிறார்.

அங்கு பிரசவம் பார்க்கும் பாட்டின் வீட்டிற்கு செல்ல அங்கு இருக்கும் பெண்ணிடம் உங்க பாட்டி எங்க என கேட்க அவங்க காசிக்கு போயிருப்பதாக கூறுகிற எப்பொழுது வருவார்கள் என கேட்க அவங்க வர மாட்டாங்க அங்கே சமாதி ஆயிடுவாங்க என சொல்ல பிறகு வெற்றி அபியின் போட்டோவை காமித்து இவங்க உங்க பாட்டி கிட்ட பிரசவம் பார்த்து இருக்காங்களா என கேட்கிறார்.

அதற்கு இல்லை நான் இவங்கள பார்த்ததே கிடையாது என சொல்லி அனுப்பி வைத்து விடுகிறார் பிறகு வெற்றி கிளம்ப அபியும் கபிலனும் வருகிறார்கள் அப்பொழுது அபியை பார்த்தவுடன் அக்கா இப்பதான் உங்கள பத்தி ஒருத்தவங்க கேட்டுட்டு போனாங்க என சொல்ல அபிகபிலனிடம் நான் நினைத்தது போலவே அவன் சுடரை பற்றி தான் தெரிஞ்சுக்க வந்திருக்கான் என சொல்ல பிறகு அந்த பெண் உங்களைப் பற்றி எதுவும் சொல்லவில்லை என கூற கபிலன் தனது நம்பரை கொடுத்துவிட்டு கிளம்பி விடுகிறார்கள்.

இதனை அந்த வீட்டிற்கு பின்புறம் இருந்து வெற்றியும் அந்த பையனும் கேட்டிருக்கிறார்கள் அப்பொழுது வெற்றி என்னைப் பற்றி யாரோ தகவல் கொடுத்துக்கிட்டே இருக்காங்க இதை நான் கண்டுபிடிக்கிறேன் என மனதிற்குள் நினைக்க இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.

Leave a Comment