வெற்றியிடம் வசமாக சிக்க இருக்கும் கண்மணி.. உச்சகட்ட பயத்தில் அபி.! தென்றல் வந்து என்னை தொடும் இன்றைய எபிசோடு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தென்றல் வந்து என்னை தொடும் இன்றைய எபிசோடில் வெற்றி பிரசவம் பார்த்த பெண்ணை தேடிச்சென்ற நிலையில் இதனை அடுத்து பக்கத்து கிராமத்தில் தான் அபி தங்கி வந்ததாக அவர் கூற எனவே துணைக்கு ஒருவரை அழைத்துக் கொண்டு பக்கத்து கிராமத்திற்கு செல்கிறார். இவர் சென்றவுடன் அபி அந்த பெண்ணிடம் வந்து அக்கா என்னை பத்தி யாராவது இங்கு வந்து விசாரிச்சாங்களா என கேட்க ஆமாம் ஒரு ஆபிசர் வந்ததாக கூற பிறகு வெற்றியின் புகைப்படத்தை காமிக்கிறார்.

இவர் தான் என சொல்ல யார் வந்து என்னை பற்றி கேட்டாலும் சொல்லி விடுவீங்களா என சொல்ல அவர் ஆபிசர் என கூறினார் அதனால்தான் சொன்னதாக சொல்ல அவன் ஆஃபீசர் இல்லை ரவுடி சாராயம் விற்பவன் என கூற அந்த பெண் அதிர்ச்சடைகிறார். இவ்வாறு வெற்றி செல்லும் பாதையில் அபி, கபிலன் இருவரும் செல்கிறார்கள். வெற்றி எத்தனையோ இடத்தில் குழந்தை காணவில்லை என போஸ்டரை பார்த்திருப்பேன் அதனை எல்லாம் பார்த்து விட்டு அவங்க அப்பா என்ன செஞ்சானோ என மனதிற்குள் திட்டி இருப்பேன் ஆனால் தற்பொழுது நானே என்னுடைய மகள் யார் என தெரியாமல் தேடிக் கொண்டிருக்கிறேன்.

மகளைக் காணவில்லை என்றால் அவங்க அப்பாவுக்கு தான் அந்த வலி தெரியும் என்னுடைய அப்பா எனக்கு ஒரு கதை சொன்னாரு அதில் நான் தான் அரக்கன் சுடர்தான் கிளி என பலவற்றையும் யோசித்துக்கொண்டே செல்ல ஒரு கட்டத்தில் பக்கத்து கிராமத்தில் ஒரு வயதானவரை பார்க்கிறார்கள். அங்கு அபியை பற்றி கேட்க ஆமா ஆபி இங்கு எல்லா வேலையும் செய்வாங்க சாணி கரைச்சு போடுவாங்க ஒரு நிமிஷம் கூட சும்மா இருக்க மாட்டாங்க என கூறிக் கொண்டிருக்க அவங்க கூட யாரு இருந்தா என கேட்கிறார்.

சுடர், விஜி என்ற இரண்டு பேரும் இருந்தாங்க என சொல்ல சுடர் அபிவோட மகளா என்று கேட்க அதைப் பற்றி இதுவரையிலும் கேட்டதில்லை என கூறிவிடுகிறார். இவ்வாறு வெற்றி கிளம்ப இவ்வளவு தூரம் வந்தும் ஒரு விஷயம் கூட கிடைக்கவில்லையே என வருத்தப்பட இருந்தாலும் என்னுடைய மகளை கண்டுபிடித்து விடுவேன் என்ற நம்பிக்கை இருப்பதாக சொல்கிறார்.

இவ்வாறு வண்டியை தள்ளிக்கொண்டு போக அப்பொழுது வெற்றியுடன் வந்த பையனின் 500 ரூபாய் பணம் காணாமல் போய்விட்டதாக சொல்கிறார் பிறகு இவர்கள் மீண்டும் தேடிச் செல்ல அங்கு கபிலன், அபி இருவரும் இருப்பது வெற்றிக்கு தெரிய வருகிறது. எனவே யாரோ நம்ம இங்கு இருக்கிறத சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள் என கண்டுபிடித்த நிலையில் பிறகு வெற்றி சித்தபுவுக்கு போன் பண்ணி அங்கு என்ன நடந்துகிட்டு இருக்கு யாரு என்னோட நம்பர அபிக்கு கொடுத்தா நான் எங்க வந்தாலும் கரெக்டா கண்டுபிடிச்சுடுறா எனக் கூற சித்தப்பு நான் யாருகிட்டயும் கொடுக்கவே இல்ல கண்மணி கிட்ட மட்டும் தான் கொடுத்தேன் என சொல்ல கண்மணி அபி கிட்ட என் நம்பரை கொடுக்க வாய்ப்பே இல்லை அப்ப நான் தான் ஓவரா யோசிக்க வேண்டும் என வெற்றி சொல்லிவிட்டு போனை வைக்கிறார்.

பிறகு சித்தப்பு மற்றும் கூட இருப்பவர்கள் பேசிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் கண்மணி தான் இந்த வேலையை பார்த்து இருக்கணும் அவள நம்பவே கூடாது என பேசிக்கொண்டு இருக்க இதனை எல்லாம் ஒட்டு கேட்ட கண்மணி நம்ம மேல எல்லாருக்கும் டவுட் வந்துடுச்சு ஏதாவது பொய் பேசணும் என வெற்றி எப்படி இருக்காரு அவருக்காக நான் விநாயகர் கிட்ட வேண்டிக்கிட்டேன் எனக் கூறி சமாளிக்க இதனை அடுத்து மறுபுறம் அபி, சுடரை பற்றி வெற்றி தெரிந்துக் கொள்ளவே கூடாது நான் தெரிந்து கொள்ளவும் விடமாட்டேன் என யோசித்துக் கொண்டிருக்கிறார் இதோடு இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.

 

Leave a Comment