சிங்கிள் கேப்பில் தப்பித்த வெற்றி.. ராஜஸ்தானில் தீர்த்துக்கட்ட முடிவு செய்த ரவுடிகள்.! அபியிடம் உண்மையை உடைத்த கண்மணி.. தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் இன்றைய எபிசோட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் தொடர்ந்து பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இன்றைய எபிசோடில் சுடர் வெற்றிக்கு போன் செய்து தன்னை பார்க்க வருமாறு கூறுகிறார். பிறகு வெற்றி சுடரை பார்க்க வர சுடர் நீ ரொம்ப நல்லவ சிம்பா உன்ன போலீஸ் அரெஸ்ட் செய்து விடுவார்களா அப்படி நடக்கக்கூடாது நீ எங்கேயாச்சும் போய்டு ஆனா அப்பப்ப வந்து என்ன பாரு என சொல்ல அதற்கு வெற்றி சரி நான் என் பொருளை தேடி போறேன் என கூறுகிறார்.

அதற்கு சுடர் கண்டிப்பா உன்னுடைய பொருள் உனக்கு கிடைக்கும் நான் கடவுளிடம் வேண்டுகிறேன் என சொல்ல அது என்னுடைய பொருள் தானா என எனக்கு சரியாக தெரியவில்லை என சொல்ல நீ ரொம்ப நல்லவன் சிம்பா அது உன்னுடையது தான் கண்டிப்பா கிடைக்கும் எனக் கூற பிறகு சுடரை அழைத்து வந்த வேலைக்கார பெண் இனிமே அபி அம்மாவுக்கு தெரிஞ்சா திட்டுவாங்க நாங்க கிளம்புறோம் என கூறுகிறார்.

பிறகு கிளம்பி விடுகிறார்கள் இதனை அடுத்து வெற்றி ராஜஸ்தான் கிளம்புவதற்காக தேவையான பொருட்களை எடுத்து வைக்கிறார். மேலும் சிம் கார்டு புதிதாக வாங்கி இருக்கும் நிலையில் இந்த நம்பர் யாருக்கும் தெரியாது சித்தப்பா மட்டும்தான் தெரியும் இவ்வாறு இதனை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் கண்மணி மற்றும் அவருடைய அப்பா போலீஸ் வந்துவிடும் என காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

வெற்றி கிளம்ப கண்மணி ஒரு நிமிஷம் உன்னுடைய நம்பரை சொல்லு என சொல்ல அது எல்லாம் ஒன்றும் தேவையில்லை என வெற்றி கூறிவிடுகிறார். மேலும் அப்பொழுதும் போலீஸ் வராத காரணத்தினால்  காக்கா குறுக்க பறந்து போகுது இது நல்ல சகுனம் கிடையாது தண்ணி கொண்டுட்டு வரேன் குடிச்சுட்டு போ என சொல்ல நான் எனக்கு இந்த சகுனமெல்லாம் பிடிக்காது என கூறிவிட்டு கிளம்புகிறார்.

இவ்வாறு இவர்கள் கிளம்பிய உடன் போலீஸ் வர இன்னும் கொஞ்சம் முன்னாடி வந்திருக்கக் கூடாதா என மனதிற்குள் கண்மணி நினைக்க போலீஸ் வீட்டை முழுவதும் தேடிப் பார்க்கிறார்கள் வெற்றி இல்லை என்பது தெரிய வருகிறது. மேலும் மறுபுறம் ராதாவின் கணவர் வெற்றி ராஜஸ்தானிற்கு போனது தெரியவந்த நிலையில் தனக்குத் தெரிந்த ரௌடிக்கு போன் செய்து ஒருத்தன் போட்டோவ அனுப்புறேன் அவன் பெயர் வெற்றி நல்லா பாத்துக்கோங்க என கூற அதற்கு அந்த ரவுடி அவனுக்கும் எங்களுக்கும் ஒரு பகை இருக்கு நாங்களும் அவனை தீர்த்து கட்டணும் அதுல சந்தோசம் தான் என கூறுகிறார்.

இதனை அடுத்து அபியை பார்ப்பதற்காக கபிலன் வர ராஜஸ்தான் தான் வெற்றி போயிருக்கான் அவனைத் தேடி போவதாக கூறுகிறார் மேலும் ராஜஸ்தானில் தான் அபி படித்ததனால் உனக்கு தெரிந்தவர்களிடமும் கூறுமாறு கபிலன் சொல்கிறார். பிறகு கபிலன் இன்று ராஜஸ்தான் கிளம்புவதாக சொல்ல இந்த நேரத்தில் விஜிக்கு வெற்றி போன் செய்து பேச விஜய் ராஜஸ்தான் இருக்கிறீர்களா என கேட்க ஆமாம் நான் சுடரை பற்றி தெரிந்து கொள்வதற்காக தான் வந்திருக்கிறேன் என சொல்கிறார்.

இது எல்லாம் தேவையா எனக் கேட்க எனக்கு இது தேவைதான் நான் தெரிந்து கொள்ள வேண்டும் முடிஞ்சா அவங்க இங்க வந்து என்னை அரெஸ்ட் பண்ணட்டும் என கண்டுபிடிக்க முடியாது என சொல்லிவிட்டு போனை வைக்கிறார். இதனை அடுத்து அபி அங்கு மங்கும் நடந்து யோசித்துக் கொண்டிருக்க சுடர் அபியிடம் கோவமா இருக்கியா என கேட்க இல்லை ஆபீஸ் விஷயமா யோசிச்சுகிட்டு இருக்கேன் என சொல்ல இந்த நேரத்தில் கண்மணி அபியிடம் போன் செய்து வெற்றி ராஜஸ்தானில் இருப்பது தெரியுமா என கேட்க தெரியும் என அப்படி சொல்கிறார்.

மேலும் அவர் எதற்காக சென்றிருக்கிறார் தெரியுமா அவருடைய மகளை கண்டுபிடிக்க தான் அதாவது சுடர் அவருடைய மகளா என்பதை தெரிந்து கொள்வதற்காக தான் ராஜஸ்தான் சென்று இருப்பதாக கூற இதற்கு அபி அதிர்ச்சி அடைகிறார் இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.

Leave a Comment