விஜய் டிவி தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் 20/6/23 இன்றைய எபிசோட்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தென்றல் வந்து என்னை தொடும்  எபிசோடில் வெற்றி கண்மணியின் பேச்சை கேட்டுக்கொண்டு அபியின் வீட்டிற்கு சென்று உன்னுடைய சொந்த பகைக்காக என் மேல கேஸ் போடுவியா என் மேல கேஸ் போட்டு நான் உள்ள போனாலும் பரவாயில்லை தைரியம் இருந்தால் போட்டுக்காட்டுடி என மரியாதை இல்லாமல் திட்ட அபி வாடி போடில பேசாத மரியாதையா பேசு என கூறுகிறார்.

இவ்வாறு இவர்கள் இருவரும் சண்டை போடும் சத்தம் கேட்டு விஜி வந்து உங்கள அவ அரெஸ்ட் பண்றதா இல்ல அப்படின்னா எனக்கு தெரிஞ்சிருக்கும் யாரோ உங்களுக்கு தப்பான தகவல் கொடுத்து இருக்காங்க இப்படி கத்தாதிங்க உங்கள பாத்தா எனக்கு பாவமா இருக்கு இங்க இருந்து முதலில் போங்க எனக் கூற பிறகு வெற்றி கிளம்புகிறார்.

பிறகு சுடர் அபியிடம் நீ எதற்கு செம்பாவை எப்ப பார்த்தாலும் சண்டை போட்டுக்கிட்டே இருக்க செம்பா ரொம்ப நல்லவ நீ எப்பொழுதும் நம்மளுக்கு உதவி செய்றவங்களுக்கு விசுவாசம் இருக்கணும்னு என்கிட்ட சொல்லுவ அது போல தானே அன்னைக்கு நம்மள கல்லால் அடிக்கும்போது ரெண்டு பேரையும் சிம்பா காப்பாத்துனா அப்புறம் கடலில் இருந்து அபி அழைச்சிட்டு தான் வீட்டிற்கு வருவேன் என எனக்கு ப்ராமிஸ் செஞ்சா இவ்வாறு நமக்கு நிறைய உதவி செஞ்சிருக்கான் அவனை போய் அரெஸ்ட் பண்ணனும்னு நினைக்கிறியே என பேசிக்கொண்டு இருக்க அதற்கு அபி நீ பெரியவங்க விஷயத்துல தலையிடாத என கோபமாக பேசிவிட பிறகு சுடர் கிளம்பி விடுகிறார்.

இதனை அடுத்து கண்மணி வெற்றியின் அம்மா அப்பா தங்கி இருக்கும் வீட்டிற்கு சென்று கோவிலுக்கு சென்று விட்டதாக கூறிவிட்டு கள்ளச்சாராயம் குடித்து நான்கு பேர் செத்துட்டாங்களா எனக் கூற பிறகு கலாச்சாராயத்தை அழிச்சதனால அபி வெற்றி மேல கேஸ் போட்டு இருக்கலாம் என சொல்கிறார் அதற்கு வெற்றியின் அம்மா அவ ஏதாச்சும் செய்யட்டும் நானே கலெக்டர் ஆபீஸ் போயி சண்டை போடுறாங்கன்னு சொல்கிறார்.

பிறகு கண்மணி முன்பு கள்ளச்சாராயம் விற்ற நபருக்கு பணம் கொடுத்து கலாச்சாராயத்தை வெற்றிதான் விற்றதாக கூற வேண்டும் என சொல்ல அவரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு கிளம்புகிறார் பிறகு கலெக்டர் ஆபீஸ் இருக்கு வெற்றியை அம்மா மண்ணெண்ணையோடு வந்து என் மகனை அரெஸ்ட் பண்ணுவியா அப்படி ஏதாவது பண்ணுனா இத ஊத்திக்கிட்டு கொளுத்திப்பேன் என சொல்கிறார்.

இப்படி செஞ்சீங்கன்னா உங்க மேல கேஸ் போடுவேன் என அபி கூற போடுடி பாக்கும் என மரியாதை இல்லாமல் பேசுகிறார் பிறகு வெற்றியின் மூத்த அண்ணி அபியிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு அவரை அழைத்துக் கொண்டு செல்கிறார். இந்த நேரத்தில் பணம் வாங்கிய கலாச்சாராயம் விற்ப்பவர் அபியிடம் வந்து தான் தற்பொழுது எல்லாம் கள்ளச்சாராயம் விற்கவில்லை என்றும் கூலி வேலை செய்து பிழைப்பதாகவும் வெற்றி தான் கள்ளச்சாராயம் இருப்பதாகவும் கூற  இதோட இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.

Leave a Comment