கள்ளச்சாராயம் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து உடைத்த மக்கள்.! கண்மணியின் சூழ்ச்சி வலையில் சிக்கிய வெற்றி.! திசை திருப்பும் ராதாவின் கணவர்.. தென்றல் வந்து என்னை தொடும் இன்றைய எபிசோட்

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் இன்றைய எபிசோடில் மக்கள் அனைவரும் வெற்றியின் உதவியுடன் கள்ளச்சாராயம் இருக்கும் குடோனை கண்டுபிடித்து அடித்து நொறுக்குகிறார்கள். இவர்கள் வந்த பிறகு போலீசார்கள் மற்றும் கலெக்டர் வர சட்டத்தை நீ எப்படி கையில் எடுக்கலாம் என போலீசார் கபிலன் வெற்றியை சண்டை போடுகிறார்.

மேலும் வெற்றியின் மீது ஆக்சன் எடுக்க வேண்டும் என கபிலன் கூற அபி கபிலனை தனியாக கூப்பிட்டு சென்றேன் நமக்கு முன்னாடி அவங்க தான் குடோனை கண்டுபிடித்து இருக்கிறார்கள். அது நல்ல விஷயம் தானே என பேசுகிறார். இதனை அடுத்து மறுபுறம் ராதாவின் கணவர் கள்ளச்சாராயம் கொடுத்த ஓனரிடம் கள்ளச்சாராயம் இருந்த இடத்தை கண்டுபிடித்து உடைத்து விட்டதாகவும் பிறகு உடைந்த கள்ளச்சாராயத்திற்கெல்லாம் நான் எப்படி பணம் தர முடியும் என பேசிக் கொண்டிருக்கிறார்.

இந்த நேரத்தில் ராதா மற்றும் அவருடைய தோழி இருவரும் வர இங்கு என்ன பண்ற என்ன ராதா கேட்கிறார். பிறகு ராதாவிடம் அவருடைய கணவர் கேள்விப்பட்டியா வெற்றி கள்ளச்சாராயத்தை அடிச்சி நொறுக்கிட்டான் என சொல்ல பிறகு வெற்றியே தான் கலாச்சாராயத்தை விற்றதாகவும் எனவே அதனால் ஆதாரத்தை அழிக்க வேண்டும் என்பதற்காக நல்லவன் போல் நடிப்பதாகவும் கூற அதற்கு அவருடைய தோழி வெற்றி அண்ணா அப்படியெல்லாம் கிடையாது அவர் நல்லவர் என வெற்றிக்கு ஆதரவாக பேசுகிறார் இதனால் ராதா குழப்பம் அடைகிறார்.

மறுபுறம் அபி மேல் அதிகாரிகளிடம் பேசிக் கொண்டிருக்க அந்தக் குடோன்  யார் பெயரில் இருக்கிறது யாரால் கள்ளச்சாராயம் விற்கப்பட்டது எனவும் காஞ்சிபுரத்தில் அனைத்து பகுதிகளிலும் கள்ளச்சாரம் விற்கப்படுவதாக கூறுகிறார்கள் உங்களுக்கு மட்டும் எப்படி தெரியாமல் இருந்திருக்கும் எனவும் அவ்வளவு பெரிய ரவுடி யார் என கேட்கிறார்.

எனவே போலீசார் ஒருவர் பெரிய ரவுடி என்றால் வெற்றிதான் எனவே வெற்றி தான் கள்ளச்சாராயம் விற்க வாய்ப்பிருப்பதாக அனைவரும் நினைப்பதாக கூற அதற்கு அபி வெற்றி இதுவரையிலும் கலாச்சாராயம் விற்றதே கிடையாது என சொல்ல இந்த நேரத்தில் கண்மணி போன் செய்து வெற்றி தான் கள்ளச்சாராயத்தை விற்றதாகவும் எனவே எங்கிருந்து தப்பிக்க இருப்பதாகவும் கூற அபியும் நம்புகிறார்.

இவ்வாறு இதனை போலீசர்களிடம் சொல்ல அதற்கு ஸ்ட்ராங்கான எவிடன்ஸ் வேண்டும் என சொல்ல போலீஸார்களும் கண்டுபிடிப்பதற்காக செல்கிறார்கள். பிறகு வெற்றி கண்மணியை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்று இருக்கும் நிலையில் அங்கு டாக்டர் எந்த பிரச்சனையும் கிடையாது இதற்கு மேல் நீங்கள் மருத்துவமனைக்கு வர வேண்டாம் வெயிலில் இன்று இருந்தாலே போதும் என சொல்கிறார்.

பிறகு கண்மணி வெளியில் போன் பேசிக் கொண்டிருக்க வெற்றி வெளியில் வந்தவுடன் அபி உன்ன அரெஸ்ட் செய்ய முடிவு எடுத்திருக்கலாம் எனவே நீ கொஞ்ச நாள் மறைவா இரு ஆந்திராவுக்கு போ என்று சொல்ல நான் ஏன் பயந்து போக வேண்டும் அவளிடம் நேரா போய் நான் பேசுகிறேன் உன் வேலையை நீ பாரு என சொல்லிவிட்டு கிளம்புகிறார் இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.

Leave a Comment