கண்மணி எந்த பித்தலாட்ட வேலை செய்தாலும் நம்பும் முட்டாள் வெற்றி.! நீயெல்லாம் கலெக்டரா இருந்து என்னத்த கிழிச்ச எனக் காரித் துப்பும் மக்கள்.. தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் இன்றைய எபிசோட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் இன்றைய எபிசோடில் கண்மணி வெற்றி சுடரை பற்றி தெரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காக அவர் அதனை தெரிந்து கொள்வதற்காக செல்ல இருந்த நிலையில் இதனை எப்படியாவது தடுக்க வேண்டும் என்பதற்காக கீழே விழுந்து அடிபட்டது போல் சீன் போடுகிறார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் டாக்டர் எந்த பிரச்சனையும் இல்லை என கூற ஆனால் கண்மணி தனக்கு மிகவும் வலிக்குவது போல் சீன் போடுகிறார்.

இதனையும் நம்பிக் கொண்டு இருக்கும் முட்டாள் வெற்றி தான் கண்மணியை இங்கேயே இருந்து பார்த்துக் கொள்வதாக சொல்கிறார். கண்மணியோடு சேர்ந்து அவருடைய அப்பாவும் நடிக்கிறார். பிறகு ராதாவிடம் அவருடைய தோழி ஒருவர் முடிச்சி விற்பது காஞ்சிபுரத்தில் அதிகமாயிடுச்சு இதையெல்லாம் நீ கேட்க மாட்டியா என கூற தனக்கு தெரியாது என சொல்கிறார்.

ராதாவின் கணவர் தான் முடிச்சிவிக்கும் விஷயம் தெரிந்து விடுமோ என்ற பயத்தில் ராதாவை இந்த விஷயத்தில் நீ தலையிட வேண்டாம் எனக் கூறுகிறார் ஆனால் அப்படி எல்லாம் விட முடியாது என ராதா சொல்கிறார். இதனை அடுத்து மறுபுறம் வெற்றி கண்மணியை அழைத்துக்கொண்டு வெளியில் வர அதற்கு கண்மணி எனக்கு வலி நிக்கவே இல்லை வேற ஹாஸ்பிடல் போகலாமா என கேட்கிறார்.

இருப்பதிலேயே இதுதான் நல்ல ஹாஸ்பிடல் போக வேண்டாம் என வெற்றி கூறுகிறார். இந்த நேரத்தில் வெற்றியின் நண்பர்கள் கள்ளச்சாராயத்தை குடித்துவிட்டு உயிருக்கு போராடுபவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அதில் சிலர் இறந்து விடுகிறார்கள். மருத்துவமனைக்கு அபியும் போலீஸ் அதிகாரிகளும் வருகிறார்கள். நீங்களா கலெக்டர் தானே இன்னும் எத்தனை பேர் சாவணும்னு காத்துகிட்டு இருக்கீங்க இதெல்லாம் தட்டிக் கேட்க மாட்டீங்களா ஏற்கனவே மனு கொடுத்து இருந்தும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என சொல்ல அதற்கு அபி ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அதில் சிலரை கைது செய்திருப்பதாகவும் சொல்கிறார்.

உடனே வெற்றி எத்தனை பெற கைது செய்து இருக்கீங்க கள்ளச்சாராயம் காச்சவுங்க கேட்க பக்கத்தில் இருப்பவர்களும் வெற்றிக்கு ஆதரவாக பேசுகின்றனர் எனவே அபியால் எதுவும் சொல்ல முடியாமல் திணறுகிறார். பிறகு பக்கத்தில் இருக்கும் போலீஸான கபிலன் வெற்றியை மிரட்ட அபி தடுத்து நிறுத்துகிறார்.

உன்னை என்ன செய்கிறேன் என்று பாரு என கபிலன் கூறிவிட்டு செல்ல பிறகு வெற்றி இவர்கள் இரண்டு நாளில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டம் பண்ணுவோம் நாம நீதி கேட்போம் எனக் கூறிவிட்டு தன்னுடன் இருக்கும் கூட்டாளிகளிடம் யார் முடிச்சு விக்கிறாங்கன்னு தெரிஞ்சே ஆகணும் என சொல்ல அவர்களும் தெரிஞ்சுக்கலாம் என கூறுகிறார்கள் இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.

Leave a Comment