மீண்டும் பிரச்சினையில் மாட்டிக் கொண்ட அபி.! அதனுடைய விளைவு என்ன.? சுடரை பற்றி வெற்றி தெரிந்த கொள்ளக் கூடாது என்பதற்காக கண்மணி போட்ட பிளான்..

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் தென்றல் வந்து என்னை தொடும் இன்றைய எபிசோடில் ராதாவின் கணவர் தொடர்ந்து பக்கத்தில் இருக்கும் அனைத்து ஊர்களுக்கும் கலாச்சாராயம் விற்று வரும் நிலையில் அனைவரும் அதனை வாங்கி குடித்துக் கொண்டிருக்கிறார்கள் மேலும் கேன் கேனாக வாங்கி செல்பவர் இருக்கின்ற நிலையில் இதனை விரைவில் அபி கண்டுபிடிக்க இருக்கிறார்.

அதாவது அபியை சந்திக்க சில பெண்கள் வரும் நிலையில் அதில் ஒருவர் அடிபட்டு இருக்கிறார் இதனை பார்த்த அபி அவரை மருத்துவமனையில் அட்மிட் செய்யுமாறு கூற அதற்கு அந்த பெண் அதெல்லாம் வேண்டாம் முதலில் என்னை அடித்தவர்களை தண்டிக்க வேண்டும் என கூறுகிறார். அதன் பிறகு நானும் தனது கணவரும் கூலி வேலை செய்து பிழைத்துக் கொண்டிருப்பதாகவும் ஆனால் அதில் மீறும் பணத்தை சாப்பிடுவதற்கு கூட வைக்காமல் குடித்து விடுவதாகவும் கூறுகிறார்.

முடிச்சு விற்பதாக சொல்ல அப்படி என்றால் கள்ளச்சாராயம் என கூற அபி எதிர்ச்சடைகிறார் பிறகு போலீஸ்காரர்களை பார்த்து இத்தனை பேர் இருக்கீங்க எப்படி கள்ளச்சாராயம் விக்கிறாங்க அத விக்க கூடாதுன்னு தடை செஞ்சிருக்காங்க அதுல கொஞ்சம் விஷம் கலந்து கொடுத்தா குடிக்கிற மொத்த பேரும் செத்துடுவாங்க இதனைப் பற்றி உடனே தெரிந்துக் கொள்ள வேண்டும் என கூறுகிறார்.

மறுபுறம் வெற்றி சுடர் பிறந்த மருத்துவமனையை கண்டுபிடித்து அவருடைய அப்பா யார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அபி வெளிநாட்டில் படித்ததால் அங்கு தான் சுடர் பிறந்திருக்க வேண்டும் என்பதற்காக வெளிநாடு கிளம்புகிறார். எனவே அவருக்கு தேவையான அனைத்து பொருட்களையும் கூட இருப்பவர்கள் எடுத்து வைக்கிறார்கள்.

இதனை பார்த்துக் கொண்டிருந்த கண்மணி எங்க போற என கேட்க அதனை சொல்லாமல் எங்க போனா உனக்கு என்ன என்ன கேட்கிறார் அதன்பிறகு அபி உன் மேல கொலவெறி இருக்கா போலீஸ் பிடித்து விடுவோம் என கூறுகிறார். பிறகு சித்தப்பு சுடர் பாப்பாவை பற்றி தெரிந்து கொள்வதற்காக செல்வதாக உண்மையைச் சொல்ல அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என கண்மணி யோசிக்கிறார் பிறகு நானும் கூட வருவதாக சொல்ல அது எல்லாம் ஒன்றும் வேண்டாம் எந்தப் பிரச்சனை வந்தாலும் நான் பார்த்துக்கிறேன் என கூறுகிறார்.

மறுபுறம் அபி போலீசார்கள் உதவியுடன் கள்ளச்சாராயம் குடிப்பவர்களை தேடி செல்ல அங்கு சிலர் குடித்துக் கொண்டிருக்கிறார்கள் இதனை பார்த்த போலீசார்கள் அவர்களை கையும் களவுமாக பிடிக்க அதில் ஒருவர் நாங்கள் குடிக்க வந்த அப்பாவி எங்களை விட்டுடுங்க சார் கள்ளச்சாராயம் விற்றவர்கள் இங்கு யாரும் இல்லை என சொல்ல பிறகு அவர்களை மட்டும் அழைத்து செல்கிறார்கள்.

இவ்வாறு இதன் மூலம் ராதாவின் கணவர் மாட்ட இருக்கும் நிலையில் மீண்டும் அபி எதிரிகளால் தாக்கப்பட இருக்கிறார். பிறகு வெற்றி கிளம்புவதாக கூறிவிட்டு வெளியில் வரும் நேரத்தில் கண்மணி கீழே விழுந்து மயக்கம் போட்டது போல் கத்த பதறிப்போய் வெற்றி மற்றும் மற்றவர்கள் கண்மணியை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு செல்கிறார்கள் இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.

Leave a Comment