சுடர், விஜியை போட்டுக் கொடுத்த கண்மணி.! துரோகத்தை மட்டும் மன்னிக்க மாட்டேன் என எச்சரிக்கும் அபி.. தனது மகள் பற்றி தெரிந்து கொள்வதற்காக ஃபாரின் கிளம்பும் வெற்றி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் அபியை ஆபத்தில் இருந்து காப்பாற்றி தற்பொழுது தான் வெற்றி அவரை அழைத்து வந்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில் வெற்றியை பார்க்க வேண்டும் என்பதற்காக சுடர் பாப்பா வந்திருக்கும் நிலையில் அவரிடம் யார் உன்னுடைய அப்பா எனக் கேட்கிறார்.

இதனை அடுத்து இன்றைய எபிசோடில் வெற்றி விஜியிடம் யார் சுடர் பாப்பா உடைய அப்பா உங்களுக்கு தெரியும் சொல்லுங்க என கேட்க அதற்கு விஜி முடியவே முடியாது நீங்களே கண்டுபிடிங்க உங்களோட ஒய்ப் கிட்ட கேளுங்க பாதியில வந்த எனக்கு எப்படி எல்லாம் தெரியும் இதற்கு மேல் என்னிடமும் சுடர்கிட்டயும் இத பத்தி பேசவே பேசாதீங்க என கரராக கூறி விடுகிறார் பிறகு வெற்றி சரிங்க என்னுடைய பிள்ளையைப் பற்றிய உண்மையை நானே கண்டுபிடிக்கிறேன் என கூறுகிறார்.

அபி எங்களை தேடுவாள் என கூறிவிட்டு விஜி கிளம்புகிறார். இந்த நேரத்தில் கண்மணி ரெஸ்ட் ரூம் போக வேண்டும் என கூற வெற்றி விஜியை அழைத்துப் போக சொல்கிறார். விஜியும் அழைத்துப் போக ரூமிற்கு சென்றவுடன் கண்மணி கையைத் தட்டி விட்டு நீ எதற்கு இங்க வந்த எனக் கேட்கிறார் அதற்கு விஜி  வெற்றியை பார்க்க வந்ததாக சொல்ல என்னுடைய அனுமதி கேட்கணும் என மிரட்டுகிறார்.

வெற்றிக்கும் எனக்கும் ஒரு தடவ வேணா கல்யாணம் நின்னு போயிருக்கலாம். ஆனால் கல்யாணமே ஆகாதுன்னு கிடையாது வெற்றி தான் என்னுடைய புருஷன் அதை எவனாலும் எவலாலும் மாற்ற முடியாது என கூறுகிறார். வெற்றியோட வாழ்க்கையில இனிமே அபிக்கும் சுடருக்கும் இடம் கிடையாது. அத முதல்ல புரிஞ்சுக்க வெற்றி எனக்கு தான் நான்தான் அவரோட பொண்டாட்டி அப்படி அவர் மட்டும் எனக்கு கிடைக்கலனா வை நானே என்னை அழிச்சுப்ப அதுக்கு முன்னாடி எங்களுக்கு தடையாய் இருந்த எல்லாரையும் அழிச்சிடுவேன்.

இதுக்கு அப்புறம் நீங்க வந்துகிட்டு இருக்காத போ இதுதான் உனக்கு கடைசி வார்னிங் கிளம்பு போ என கூற விஜியும் கிளம்பி விடுகிறார். இதனை அடுத்து ராதா தனது கணவருடன் பேசிக் கொண்டிருக்க ராதா பஞ்சாயத்தை முடித்து விட்டதாகவும் கலெக்டர் வந்தால் இந்த பிரச்சனை தீர்ந்து விடுவதாகவும் கூறிக் கொண்டிருக்கிறார். அப்பொழுது அவருடைய கணவர் அபிக்காக தான் கண்மணி உடன் நடக்க இருந்த திருமணத்தையே வெற்றி நிறுத்தினா உடனே மூன்று நாட்கள் காணாமல் போய்விட்டார்கள் என பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் அவருக்கு போன் வருகிறது.

அவருடைய நண்பர்கள் கீழே நிற்பதாக கூற அதற்கு ராதா இப்பொழுது எல்லாம் அவர்கள் அடிக்கடி வீட்டிற்கு வருவதாக கேட்கிறார் பிறகு கீழே வந்தவுடன் எதற்கு வீட்டிற்கு வந்தீர்கள் என கேட்க சரக்கு வந்து விட்டதாக சொல்கிறார்கள். இதனை அடுத்து கண்மணி நபர் ஒருவருக்கு போன் செய்து தன்னுடைய நம்பரில் இருந்து போன் செய்தால் நான் தான் என கண்டுபிடித்து விடுகிறார்கள் அவர்களுக்கு தெரியக்கூடாது என சொல்ல அந்த நம்பரும் கண்மணிக்கு சொல்லித் தருகிறார்.

பிறகு இதனை பயன்படுத்திக் கொண்டு கண்மணி அபிக்கு போன் செய்து பேச அபி நீங்கள் எதற்கு தேவையில்லாமல் சும்மா சும்மா கால் பண்ணிட்டு இருக்கீங்க என கேட்க அதற்கு கண்மணி நீங்களும் சுடரும் வெற்றி கூட சேரக்கூடாது நினைக்கிறீங்க ஆனால் உங்க கூட இருக்கிறவங்க வெற்றியை கூட சுடர் சேர்க்கணும்னு முயற்சி பண்ணிக்கிட்டு இருக்காங்க அப்படி சுடர உங்க கிட்ட இருந்து பிரித்து வெற்றி கூட சேர்க்கணும்னு உங்க கூடவே இருக்கிறார்களே விஜிமா அவங்க தீவிரமா முயற்சி பண்ணிக்கிட்டு இருக்காங்க எனக் கூறி விட்டு போனை வைத்து விடுகிறார்.

இந்த நேரத்தில் விஜி வர நீங்க எனக்கு ஹெல்ப் பண்ணனும் தானே இங்கு இருக்கீங்க சுடர பத்தி வெற்றிக்கு தெரியக்கூடாது என என்கிட்ட ப்ராமிஸ் பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்ன சொல்லிவிட்டு நான் எதை வேணாலும் மன்னிப்பேன் துரோகத்தை மட்டும் மன்னிக்க மாட்டேன் என கூற நான் ஏன் அப்படி பண்ண போறேன் என விஜி சொல்கிறார். சுடர் என்கிட்ட இருந்து பிரிஞ்சா என் உயிரே போற மாதிரி என்ன கூற விஜி அதிர்ச்சி அடைகிறார். அதுக்கு மேல நான் வெறும் பினம் தான் என சொல்ல பிறகு ஆல் வந்து விடுகிறார்கள்.

இதனை அடுத்து மறுபுறம் வெற்றி அபி கலெக்டர் எக்ஸாம் எழுதி பாஸ் ஆன கண்ரிக்கு சென்று சுடர் எந்த மருத்துவமனையில் பிறந்தார் என தெரிந்து கொள்ள இருப்பதாகவும் அபி மிகவும் நேர்மையானவர் சுடர் எனக்கு தான் பிறந்திருந்தால் என்றால் நான்தான் அப்பா என பர்த் சர்டிபிகேட்டிலும் இருக்கும் எனவே நான் போகுவது உறுதி என சொல்கிறார்.

Leave a Comment