3 பேரை காதளித்துள்ளேன் ஆனால் அத்தனையும் பிரேக்கப் ஆகிடுச்சு.! விஜய் டிவியை அதிரவிட்ட அமலாபால்…

தற்பொழுது உள்ள தொலைக்காட்சிகள் தொடர்ந்து ஏராளமான புதிய நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி வரும் நிலையில் தற்பொழுது விஜய் டிவி ராஜா வூட்ல பார்ட்டி என்ற நிகழ்ச்சியை கடந்த சில வாரங்களாக ஒளிபரப்பி வருகிறார்கள். பொதுவாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவது வழக்கமாக இருக்கிறது.

மேலும் தொடர்ந்து திரை பிரபலங்களையும் தங்களது நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள வைக்கிறார்கள். அந்த வகையில் தற்பொழுது ராஜு வீட்டில் பார்த்து நிகழ்ச்சி ராஜு மற்றும் பிரியங்கா இருவரும் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார்கள். இந்த வாரம் இந்நிகழ்ச்சியில் நடிகை அமலா பால் கலந்து கொண்டு பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை அமலாபால் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்த மிகவும் பிசியாக இருந்து வருகிறார். இவர் இயக்குனர் ஏ.எல்.விஜய் அவர்களை திருமணம் செய்து கொண்டு சில வருடங்களிலேயே விவாகரத்து பெற்ற பிரிந்தார்.

விவாகரத்திற்கு பிறகு டிப்ரஷனில் இருந்து வந்த இவர் தொடர்ந்து சர்ச்சை கூறிய திரைப்படங்களில் நடித்து தனது பெயரை கெடுத்துக் கொண்டார். மேலும் இவர் கவர்ச்சி மற்றும் ரொமான்ஸ் போன்ற காட்சிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். ஏ.எல் .விஜய் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டாலும் தற்போது வரையிலும் அமலா பால் யாரையும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் ராஜு வூட்டுல பார்ட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது இவர் பதில் சொன்னதைப் பார்த்த ராஜு சாமியாரைப் போல் பதில் சொல்றீங்க என கூறி சிரிக்கிறார் இதற்கு பிரியங்கா இரண்டு, மூன்று பேரை காதலித்தால் அப்படிதான் இருக்கும் என கூற அதற்கு அமலா பால் ஆமாம் நானும் இரண்டு மூன்று பேரை காதலித்தேன் ஆனால் எதுவும் சேட்டாகவில்லை என்பது போல் கூறியுள்ளார்.

Leave a Comment