செல்வம் வைத்திருந்த பென்ட்ரைவை கண்டுபிடிக்க இருக்கும் சந்தியா.! எதிர்பாராத ட்விஸ்ட்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது அந்த வகையில்தான் ராஜா ராணி 2.  மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியலில் தற்பொழுது வெளியாகி உள்ளது ப்ரோமோவில் கோவிலின் சுற்று சுற்றி எடுக்கப்பட்ட பார்வதியின் போட்டோக்களை போனிலிருந்து பென்டிரைவ்வுக்கு காபி செய்துள்ளான் செல்வம்.

எப்படியாவது இந்த பென்டிரைவை தனது குழுவில் உள்ள ஒருவன் என்னிடம் கொடுத்து விட வேண்டும் என  முயற்சி செய்யும் நேரத்தில் சரவணன் சந்தியாவோடு கடைக்கு வந்து விடுகிறான்.  பிறகு செல்வம் என்ன செய்வது என்று தெரியாமல் திருதிருவென முழிக்க சந்தியாவும் சரவணனும் அவனைப் பார்த்துவிட்டு இப்போதெல்லாம் உனக்கு வேலையில் கவனம் இல்லை என்று கூறுகிறார்கள்.

பிறகு டெலிவரி கொடுக்க வேண்டியதை கொடுத்தாச்சா என்று கேட்க இன்னும் கொடுக்க இப்போது கொடுத்து விடுகிறேன் என கூறுகிறான் செல்வம். எனவே சரவணன் சந்தியாவை கடையில் இருக்கச் சொல்லிவிட்டு செல்வத்தை அழைத்துக்கொண்டே டெலிவரி கொடுப்பதற்காக இருவரும் வண்டியில் செல்கிறார்கள்.

அந்த பென்ட்ரைவை வாங்க வேண்டும் என்பதற்காக இவர்களின் பின்னாடியே அந்த பென்டிரைவை வாங்குவதற்காக வந்த நபர் செல்கிறான். செல்வம் என்னதான் முயற்சி செய்தாலும்  சரவணன் இருப்பதால் அவனால் கொடுக்க முடியவில்லை இப்படிப்பட்ட நிலையில் ஓரிடத்தில் போலீசார்கள் வாகனங்கள் அனைத்தையும் சோதனை செய்து வருகின்றனர்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த செல்வம் உடனே சரவணனிடம் வண்டியைத் திருப்ப வேறு வழியில் செல்லலாம் என்று கூறுகிறான் அதற்கு சரவணன் ஏன் வேறு வழியில் போக வேண்டும் என்று கூறிவிட்டு போலீசார் இருக்கும் வழியிலேயே போகிறான் உடனே செல்வம் கையில் வைத்திருந்த பென்டிரைவை சரவணன் பாக்கெட் போட்டு விடுகிறான்.

பிறகு சரவணனை போலீசார் விசாரிக்கும் நேரத்தில் நீங்க சுவீட்கடை சரவணன் தானே சென்னையில் கூட போய் சமையல் போட்டியில் ஜெயிச்சுட்டு வந்தீங்க கரெக்ட்டா என கேட்க சரவணன் ஆமாம் என கூறுகிறான். அதன்பிறகு அவருக்கு போன் வர போலீசார் சரி நீங்க கிளம்புங்க என அனுப்பி வைத்துவிட்டனர்.

பிறகு டெலிவிரி சென்ற வீட்டில் பணத்தை எடுத்து வந்து சரவணனின் பாக்கெட்டில் வைப்பது போல பென்டிரைவை எடுக்க முயற்சி செய்கிறான் செல்வம். பிறகு சரவணன் பணத்தை கடையில் எடுத்து சென்று வைக்குமாறு கூற செல்வம் அவ்வளவு எவ்வளவு முயற்சி செய்தும் எடுக்க முடியவில்லை.

இவ்வாறு ஏராளமான முயற்சி செய்தாலும் அவனால் எடுக்க முடியவில்லை.  பிறகு கடைக்கு வந்து நடப்பதற்காக சரவணன் முயற்சி செய்து கொண்டிருக்கும் பொழுது சரவணன் வழுக்கி கீழே விழ சட்டைப்பையில் இருந்த அனைத்து சில்லரை காசுகள் மற்றும் பென் டிரைவ் ஆகியவை கீழே விழுந்துவிட்டது.

பிறகு சரவணனை பெட்டில் உட்கார வைத்துவிட்டு சந்தியா அனைத்தையும் எடுக்க முயற்சிக்கிறாள் அப்போது பென்டிரைவ்  கட்டிலுக்கு அடியில் சென்று விடுகிறது.அந்த பக்கம் செல்வம் பென்டிரைவை தொலைத்து விட்டேன் என தன்னுடைய இயக்கத்தினரிடம் சொல்ல அவர்கள் செல்வத்தை கடுமையாக தீட்டுகின்றனர்.  இவ்வாறு இந்த ஆதாரத்தை சந்தியா அல்லது சரவணன் கையில் கிடைத்தால் மட்டுமே செல்வத்தை பற்றிய உண்மையான முகம் தெரியும் என்று கூறப்படுகிறது.

Leave a Comment