ஆதியை பழி வாங்கிய அர்ச்சனா.! உச்சகட்ட கோபத்தில் ஜெசி..

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் தொடர்ந்து ஏராளமான திருப்பங்கள் இருந்து வரும் நிலையில் தற்பொழுது ஆதி செய்த பித்தலாட்ட வேலைகள் தெரிந்த ஜெசி அதனை சொல்லி காண்பித்து திட்டுகிறார். இதை வைத்து தான் இன்றைய எபிசோட் ஒளிபரப்பாக இருக்கிறது.

இன்றைய எபிசோடில் சிவகாமி வருத்தமாக இருக்க வீட்டிற்கு வரும் சரவணன் ஆதி மற்றும் செந்திலை திட்டி தீர்க்கிறார் எல்லாரையும் அப்பா அம்மாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் சொல்ல முதலில் அர்ச்சனா முந்திகிட்டு மன்னிப்பு கேட்கிறார் மேலும் கடையை நாம் எடுத்துக் கொள்ளலாம் என மன்னிப்பு கேட்க பிறகு செந்திலும் மன்னிப்பு கேட்கிறார்.

அதன் பிறகு ஜெசி மன்னிப்பு கேட்க ஆதி ஏனோ தானோ என்று மன்னிப்பு கேட்கிறார். பிறகு இந்த கடை யாருக்கு என அர்ச்சனா மீண்டும் பேச்சைக் கேட்க சிவகாமி இந்த கடை ஜெசிக்கு தான் என சொல்ல அர்ச்சனா திருட்டுப் பையன் கிட்ட கடையை கொடுக்கறீங்க அவன் எப்படி கடையை நடத்துவான் ஏதாவது திருடிக்கிட்டு தான் ஓடுவான் என சொல்ல ஜெசி என்ன என் புருஷனை திருடன் திருடன் என்று சொல்றீங்க அப்படி என்ன திருடிட்டு போனான் என்கிட்ட போனால் எனக்கு கூட அனைவரும் தடுத்து நிறுத்தியும் அர்ச்சனா 5 லட்சம் ரூபாய் பணத்தை திருடிய விஷயத்தை போட்டு உடைக்கிறார்.

இதனால் ஜெசி அதிர்ச்சி அடைகிறார். இது உண்மைதானா என ஜெசி அனைவரிடமும் கேட்க அனைவரும் அமைதியாக இருக்கிறார்கள் இதனால் ஜெசி இது உண்மை என்பதை புரிந்து கொள்கிறார் ஆதி சமாதானம் செய்ய முயற்சிக்க ஜெசி கோவப்படுகிறார் இந்த நெக்லஸ் இந்த படத்தில் இருந்து தான் வாங்கினியா என கேட்க ஆதி ஆமாம் என்ன சொல்ல மேலும் அதிர்ச்சி அடைகிறார்.

பிறகு சரவணன் சந்தியாவுக்கு போன் போட சந்தியா போனை எடுக்காமல் தூங்கி கொண்டு இருக்கிறார் அதன் பிறகு சேட்டா மற்றும் அவருடைய தோழி கதவை தட்ட அப்பொழுதும் கதவை திறக்காத காரணத்தினால் இருவரும் பதட்டமடை என்றார்கள் இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.

Leave a Comment