சந்தியாவிடம் வசமாக சிக்கிய அர்ச்சனா.! சந்தியாவின் அதிரடி செயல்..

விஜய் டிவியின் ராஜா ராணி 2 சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது வருவதால் டிஆர்பி-யில் டாப் சீரியலாக வளர்ந்து வருகிறது.இனி வரும் எபிசோடுகளில் சந்தியா தன்னுடைய ஐபிஎஸ் கனவை மொத்தமாக மூட்டை கட்டி வைத்துவிட்டு மாமியார் சொன்னபடி கணவனுக்கு நல்ல மனைவியாகவும் குடும்பத்திற்கு ஒரு நல்ல மருமகளாக இருக்க வேண்டுமென்று முடிவெடுக்கிறாள்.

எனவே ஐபிஸ்சாக வேண்டும் என்று படித்த புத்தகத்தையும் அம்மா அப்பாவின் போட்டோவையும் பெட்டியில் வைத்து பூட்டிக்கொண்டு இது
இனி வேண்டாம் என்று அதை ஸ்டோர் ரூமில் வைப்பதற்கு எடுத்துக்கொண்டு கிளம்புகிறாள்.

இதை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த சரவணன் சந்தியாவின் மாற்றத்திற்கு கட்டாயம் அம்மா தான் காரணமாக இருக்கும் என்பதை புரிந்துகொண்டான்.பிறகு சரவணன் இனிமேல் சந்தியாவிடம் பேசி ஒன்றும் ஆகப்போவதில்லை அம்மாவை எப்படி சரி செய்ய வேண்டும் என்பதை யோசித்து தனக்குத்தானே பேசிக் கொண்டிருக்கிறான்.

இவ்வாறு சந்தியா, தன்னுடைய போலீஸ் கனவை தன் மாமியாருக்காக விட்டுக்கொடுத்து மறக்க நினைத்தாலும், அர்ச்சனா செய்யும் கேவலமான செயலினால் சந்தியாவின் போலீஸ் மூளையை தட்டி எழுப்பிக் கொண்டிருக்கிறது. ஏனென்றால் அர்ச்சனா தம்முடைய மாமனாருடைய ஏடிஎம் கார்டை அவருக்கு தெரியாமலேயே எடுத்து வைத்துக்கொண்டு அவரிடம் இருக்கும் பணத்தை எப்படியாவது எடுத்து விட வேண்டும் என யோசிக்கிறாள்.

அர்ச்சனாவின் முழியே சரியில்லையே அர்ச்சனா ஏதோ தப்பு செய்யப் போகிறாள் என அவளிடம் கேட்கிறாள் சந்தியா.இதற்கு சிறிதும் பிடிகொடுக்காமல் எஸ்கேப் ஆகிறாள் அர்ச்சனா. இவ்வாறு இனிவரும் நாட்களில் சந்தியா தன் மாமியார் சிவகாமி பேச்சைக் கேட்க போகிறாளா அல்லது கணவனின் முழு ஒத்துழைப்புடன் ஐபிஎஸ் ஆக போகிறாளா என பொறுத்திருந்து பார்ப்போம்.

இனிவரும் காலகட்டங்களில் சந்தியாவானஆலியா மானசா நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதால் ஓய்வெடுக்க போகிறார். அவருக்கு பதிலாக வேறு ஒரு நடிகை விரைவில் சந்தியா கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார் எனவே அதை யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Comment