சென்னைக்கு செல்ல தயாரான சந்தியாவிற்கு அதிர்ச்சி கொடுத்த குடும்பத்தினர்கள்.! ஷாக்கான சந்தியா..

விஜய் டிவி முக்கியமான சீரியல்களில் ஒன்றான ராஜா ராணி 2 சீரியலில் இன்று எபிசோடில் சந்தியா சென்னைக்கு கிளம்ப தயாராகி இருக்கிறவர் மேலும் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் சந்தியாவை பாராட்டி வருகிறார்கள் பிறகு சரவணன் ஒரு நிமிஷம் எனக் கூறிவிட்டு சந்தியாவிற்காக வாங்கிய ஷூ வை கொண்டு வந்து கொடுக்க மகிழ்ச்சி அடைகிறார் சந்தியா.

பிறகு பார்வதியும் பேண்ட் சட்டை எடுத்து கொடுக்கிறார் இதனைத் தொடர்ந்து ஆதி ஸ்மார்ட் வாட்ச் எடுத்து வந்து கிப்டாக கொடுக்கிறார். சரவணனின் அப்பா ரவி சந்தியாவிற்காக கோவிலில் பூஜை செய்து வாங்கி வந்த கயிறை கட்டி விடுகிறார். இப்படி எல்லோரும் கிப்ட் கொடுக்க மைல் சந்தியாவுக்காக வாட்டர் பாட்டில் ஒன்றை கிப்டாக கொடுக்கிறார்.

இதனை தொடர்ந்து சர்க்கரை என்ன கிப்ட் வாங்குவது என எனக்கு தெரியவில்லை எனவே சேர்த்து வைத்த காசை உங்களுக்கு கொடுக்கிறேன் உங்களுக்கு புடிச்சதை வாங்கிக்கோங்க என தருகிறார். இதனை தொடர்ந்து அர்ச்சனாவும் உனக்காக நான் சத்து மாவு அரைச்சு வச்சேன் இந்த தினமும் சாப்பிடு என கொடுக்கிறார் இதனால் அனைவரும் ஆச்சரியப்படுகின்றன.

பிறகு சந்தியாவை உட்கார வைத்து வயிறு நான் சஞ்ச இட்லி சாம்பார் சாப்பிடுங்க என ஊட்டி வருகிறார். இதனைத் தொடர்ந்து சென்னைக்கு கிளம்ப சந்தியா தயாராக இருக்கும் நிலையில் அக்கம்‌ பக்கத்தினர்கள் வந்து சந்தியாவிற்கு வாழ்த்துச் சொல்கின்றனர்.

பிறகு சிவகாமி திடீரென்று இன்னும் நீ இரண்டு பேரு கிட்ட ஆசீர்வாதம் வாங்க வேண்டும் என கூறி சந்தியாவை நாம் அப்பா போட்டோவை கிப்டாக கொடுக்க சந்தியா கண் கலங்குகிறார் பிறகு சரவணன், சந்தியா, சிவகாமி மூவரும் சென்னைக்கு கிளம்புகின்றனர் இதோடு இன்றைய எபிசோட் நிறைவடைகிறது. எப்படியாவது வெற்றி பெற்று சந்தியா ஐபிஎஸ் ஆகிவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment