சந்தியாவை அசிங்கப்படுத்திய அப்துல்.! உண்மையை மறைக்கும் அர்ச்சனா..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலில் தற்போது தொடர்ந்து ஏராளமான திருப்பங்கள் இருந்து வரும் நிலையில் தற்போது பயிற்சியாளர்களுக்கு சைக்கிள் பயிற்சி கொடுப்பதாக ஒருவர் வந்திருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அப்பொழுது அப்துல் உங்களுக்கு தான் உடம்பு முடியலையே நீங்க வேணும் ரெஸ்ட் எடுத்துக்கோங்க நான் வேணா கோச்சிக்கிட்ட பேசுறேன் என சொல்ல உங்க வேலையை நீங்க பாருங்க என்னால பாத்துக்க முடியும் என சந்தியாவை கூறுகிறார்.

அதன் பிறகு அவர்களுக்கு ஹெர் சைக்கிள் நடக்க அதில் அப்துல் மிகவும் சூப்பராக பர்ஃபார்ம் செய்ய சந்தியா வழக்கம் போல் பாதியில் முடியாமல் நிறுத்தி விடுகிறார். அதனை தொடர்ந்து சந்தியா இத சரியா செஞ்சி இவன் மூக்கை உடைக்காமல் விட்டுட்டோமே என வருத்தப்படுகிறார். மேலும் அடுத்த சைக்கிள் நடக்கா அதில் சந்தியா நன்றாக பெர்ஃபார்மன்ஸ் செய்கிறார்.

பிறகு நாளைக்கு இதனை வைத்து ஒரு போட்டி நடைபெற இருப்பதாகவும் அது வித்தியாசமானதாக இருக்கும் என விதிமுறைகளை கூறுகிறார் கோச் இதனை தொடர்ந்து மறுபுறம் அர்ச்சனா பத்மநாதன் தேர்தலில் நிற்க வைத்து பற்றி செந்திலிடம் ரகசியமாக பேச இந்த விஷயத்தை வீட்டில் சொல்லிவிடலாம் என செந்தில் கூற அதற்கு வேண்டாம் என மறுக்கிறார்.

மேலும் அர்ச்சனா எதுவும் சொல்ல வேண்டாம் இப்பொழுது எனக் கூறிவிடுகிறார். பிறகு சந்தியா, ஜோதி மற்றும் சேத்தான் இடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது சரவணன் போன் போட ஜோதி போனை வாங்கி பேசுகிறார். பிறகு சேத்தான் சரவணனிடம் பேசுகிறார் அடுத்தது சந்தியா, சரவணன் இடம் பேசும்பொழுது சரவணன் விடுகதைக்கு பதில் கிடைத்துவிட்டது என பதிலை கூறுகிறார்.

நாளைக்கு சைக்கிள் ப்ரைஸ் நடப்பது பற்றி சொல்ல இது ரொம்ப கஷ்டமான விஷயம் பார்த்து பண்ணுங்க என சரவணன் கூறுகிறார் இதோடு இன்று எபிசோட் நிறைவடைகிறது இப்படிப்பட்ட நிலையில் இன்னும் சில நாட்களில் செந்தில் சரவணன் எதிராக இந்த தேர்தலில் போட்டியிட இருப்பது தெரிய வர இருக்கிறது எனவே இதனால் குடும்பத்தினர்கள் இடையே பெரிய சண்டை ஏற்பட உள்ளது.

Leave a Comment