ரொமான்ஸ்சில் களமிறங்கிய சந்தியா மற்றும் சரவணன்.! முடியலடா சாமி என கூறும் ரசிகர்கள்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்கள் குடும்பங்களில் என்ன நடக்கிறதோ அதனை மையமாக வைத்து ஒளிபரப்பி வருகிறார்கள். பொதுவாக பெண்கள் என்றாலே ஏராளமான கனவுகளுடன் வாழ்ந்து வருவது வழக்கம் ஆனால் குடும்ப சூழ்நிலையினால் அவர்களால் தனது கனவை நிறைவேற்ற முடியாமல் போய்விடுகிறது.

அந்த வகையில் ராஜா ராணி 2 சீரியலிலும் தனது மனைவி சந்தியாவின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக சரவணன் பல போராட்டங்களை செய்து வருகிறான். ஆனால் இவனின் அம்மாவான சிவகாமியின் பேச்சை தட்ட முடியாமல் இக்கட்டான சூழ்நிலையில் தவித்து வருகிறான்.

சிவகாமிக்கு தனது மருமகள் போலீசாக விரும்புகிறாள் என்ற தகவலை அறிந்தவுடன் சந்தியாவை ஒதுக் ஆரம்பித்துவிட்டாள். எனவே தற்போது சந்தியா எது செய்தாலும் அதனை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு அவளிடம் சண்டை போடுவதை சிவகாமி வழக்கமாக வைத்திருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் வீட்டிற்கு நல்ல மருமகளாக அடக்க ஒடுக்கமாக இருக்க வேண்டும்  போலீஸ் வேலைக்கு போகக்கூடாது என்று திட்ட வட்டமாக கூறிவிட்டாள்.

என்ன நான் தற்பொழுது சரவணன் சந்தியாவை எப்படியாவது போலீஸ் ஆக்கிவிட வேண்டும் என்று நினைத்து வந்தாலும் சந்தியா தனது சின்ன வயதில் இருந்து வந்த கனவை தனது மனதில் புதைத்து விட்டு தலையில் நிறைய மல்லிகைப் பூவை வைத்துக்கொண்டு சரவணனை கட்டியணைத்து எனக்கு அழகான குழந்தை வேண்டும் எனக்கூறி முத்தம் கொடுக்கிறாள்.

ஆனால் இது சரவணனுக்கு பிடிக்கவில்லை பிறகு தனது அம்மா தான் சந்தியாவிடம் ஏதோ பேசி மனதை மாற்றி இருக்கிறார் என்று நினைத்துக்கொண்டான். அதோடு சந்தியாவின் அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி என அனைவரின் கனவான சந்தியா போலீசார் ஆவதை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என போராடி வருகிறான்.

 

Leave a Comment