பார்வதியை அசிங்கப்படுத்தி சிவகாமியிடம் வாங்கி கட்டிக்கொண்ட அர்ச்சனா.! சந்தியா எடுத்த அதிரடி முடிவு.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீசன்2 சீரியல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இதை தொடர்ந்து ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் ஆதரவை கொடுத்து வருவதால் டிஆர்பி யில் சூப்பர் ஹிட் சீரியலாக வளர்ந்து வருகிறது. இந்த சீரியல் தற்போது ரசிகர் மத்தியில் நல்ல ரீச் கிடைத்து வருகிறது.

இதைத்தொடர்ந்து ராஜா ராணி சீசன்2 சீரியல் சில வாரங்களாக மிகவும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. விக்கியால் பல கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டிருந்தபோது சந்தியாவால் பார்வதி பாஸ்கரை திருமணம் செய்து சந்தோஷத்தில் இருந்தார். கல்யாணமாகி மறு வீட்டிற்கு வந்த பார்வதியை விக்கியின் அப்பா ஆள் வைத்து கடத்தி விட்டார். இது தெரியாமல் குடும்பத்தில் உள்ள அனைவர்களும் பார்வதியை தேடி அலைகிறார்கள்.

இந்நிலையில் பார்வதியின் அப்பா தன் மகளை கடத்தி விட்டார்கள் என்று பதட்டத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் திக்குமுக்காகி வருகிறார். அப்போது சந்தியா சரவணனிடம் போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்கலாம் என்று கூறிவருகிறார். அதைக்கேட்ட சரவணனும் போலீசாரிடம் கம்ளைண்ட் கொடுப்பதற்காக செல்லும்போது அர்ச்சனா பார்வதி பற்றி தவறாக பேசி வருகிறார். அர்ச்சனாவின் வாய் சும்மாவே இருக்காது என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

எனவே பார்வதியை கடத்துவதற்கு வாய்ப்பில்லை முன்னாள் காதலனான விக்கியை பார்க்க போக கூட வாய்ப்பு இருக்கு என்று பார்வதியை தவறாக பேசி வருகிறார். அர்ச்சனா இதைக் கேட்டு வீட்டில் உள்ள எல்லோரும் தேவையில்லாத எல்லாம் பேசக்கூடாது என்று எல்லோரும் அர்ச்சனாவை திட்டி வருகிறார்கள். அதன் பிறகு வாயை மூடிக்கொண்டு அர்ச்சனா.

அதன்பிறகு போலீஸிடம் கம்ப்ளைன்ட் கொடுத்த பிறகு போலீஸ் விசாரித்து கொண்டு வருகிறார்கள். உங்களுக்கு யாரு மேலயாவது சந்தேகம் இருக்கா என்று கேள்வி கேட்கிறார். அதற்கு சந்தியா விக்கியின் அப்பா தான் இந்த வேலையை செய்திருக்க முடியும் என்று கூறுகிறார். அதன் பிறகு சந்தியா பார்வதியை ஒருவழியாக கண்டுபிடித்து விட்டார். சந்தியாவின் சந்தேகத்திற்கு விக்கியின் அப்பாதான் கடத்தி வைத்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து மேலும் மேலும் சந்தியாவிற்கு வீட்டில் நல்ல பெயர் கிடைத்து வருகிறது. சந்தியாவை பாராட்டுவதால் அர்ச்சனாவுக்கு எரிச்சலைத் தூண்டுகிறது. இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் அடுத்த எபிசோடுகளில் என்ன நடக்கப்போகிறது. என்று காத்துக் கொண்டு வருகிறார்கள்.

Leave a Comment