சிவகாமி குடும்பத்தைத் தீத்துக்கட்ட முடிவுசெய்த விக்கி மற்றும் செல்வம்.! கொஞ்சி விளையாடும் சரவணன் மற்றும் சந்தியா.. இன்றைய முழு எபிசோட் இதோ.!

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் முதல் சீசன் அறிமுகமாகி அமோக வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது சீசனும் ஒளிபரப்பாகி  அறிமுகமான சில கால கட்டத்திலேயே டிஆர்பி-யில் இடத்தைப் படித்த சீரியல்தான் ராஜா ராணி 2.

இந்த சீரியலின் ஹீரோயினாக சந்தியா கேரக்டரில் ஆலியா மானசாவும் இவருக்கு ஜோடியாக திருமணம் சீரியலில் நடித்து பிரபலமடைந்த சித்துவும் நடித்த வந்தார்கள்.  பிறகு அலியா மனசாவிற்கு குழந்தை பிறந்ததால் இந்த சீரியலில் இருந்து விலகினார் தற்போது சென்னை மாடல் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சமீப காலங்களாக இந்த சீரியல் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.  அந்த வகையில் தற்போது தான் பார்வதியை தீவிரவாதிகளிடம் இருந்து பத்திரமாக மீட்டுள்ளனர்.  இதன் காரணமாக பாம் வெடிப்பதை தடுத்த காரணத்தினால் சந்தியாவிற்கு போலீஸ்காரர்கள் பாராட்டு விழாவை நடத்த முடிவெடுத்து உள்ளார்கள்.

மேலும் சந்தியாவிற்கு போலீசாவதற்கான வாய்ப்பையும் கொடுத்த நிலையில் சிவகாமி அதெல்லாம் எங்களுக்கு எதுவும் வேண்டாம் நல்ல மருமகளாக சந்தியா எங்கள் வீட்டிலேயே இருந்தால் போதும் என்று கூறிவிட்டார்கள்.  இருந்தாலும் தென்காசியில் உள்ளவர்கள் மற்றும் போலீசார்கள் அனைவரும் இணைந்து சந்தியாவிற்கு பாராட்டு விழா ஒன்றை நடத்த உள்ளார்கள்.

இந்நிலையில் ஜெயிலில் இருக்கும் பார்வதியின் முன்னாள் காதலன் விக்கி மற்றும் தீவிரவாதி செல்வம் இருவரும் எப்படியாவது சந்தியாவின் குடும்பத்தை தீர்த்து கட்ட வேண்டும் என முடிவு செய்துள்ளார்கள்.  இருவரும் இணைந்து ஜெயிலிலேயே பிளான் போட்டு வரும் நிலையில் வெளியில் சந்தியா மற்றும் சரவணன் மிகவும் மகிழ்ச்சியாக அடித்து விளையாண்டு கொண்டு குஞ்சு வருகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து சந்தியாவின் வீட்டிற்கு முன் பத்திரிக்கையாளர்கள் வர சத்யா தன் அனுபவத்தைப் பற்றி அனைவரிடமும் பகிர்கிறார்.  இது சிவகாமிக்கு பிடிக்காத காரணத்தினால் சந்தியாவை கண்டிக்கிறார் இதுதான் இன்று வெளியாகவுள்ள எபிசோடில் ஒளிபரப்பாக இருக்கிறது.

Leave a Comment