பார்வதியிடம் தப்பாக நடந்து கொண்ட சாமியார்.! இதன் காரணமாக சந்தியா, கண்ணம்மா எடுத்த அதிரடி முடிவு..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றுதான் ராஜா ராணி 2. இந்த சீரியலில் நடித்து வரும் அனைத்து கேரக்டர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் மேலும் டிஆர்பி-யில் எகிற வேண்டும் என்பதற்காக ராஜா ராணி மற்றும் பாரதி கண்ணம்மா 2 சீரியல்களையும் ஒன்றிணைத்து மகாசங்கமாக ஒளிபரப்பி வருகிறார்கள்.

தற்பொழுது சாமியார் சாமியின் நகை திருட்டுப் பழியை சிவகாமியின் குடும்பத்தில் போட்ட நிலையில் அந்த நகைகளை அர்ச்சனா தான் திருடி உள்ளார் என்பது சந்தியா, சரவணனுக்கு தெரிய வந்துள்ளது. மேலும் அந்த சாமியாரை எப்படியாவது வசமாக மாட்டி விட வேண்டும் என பல முயற்சிகளை செய்து வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலை என் ஊரே சிவகாமியின் குடும்பத்தை திட்டி வரும் நிலையில் இந்த பிரச்சனைகளை சரி செய்ய வேண்டும் என்பதற்காக தனது தோழியின் அறிவுரையின் மூலம் சாமியாரை பார்ப்பதற்காக பார்வதி செல்கிறார். அப்பொழுது பார்வதியை பக்கத்தில் வரச் சொல்லி தொழில் மீது கைய போட்ட நிலையில் பல்லார் என சாமியாரை அடித்து விட்டு பார்வதி செல்கிறார்.

பிறகு தனது வீட்டிற்கு சென்றதும் சந்தியா கண்ணம்மாவிடம் இதனை பற்றி கூற சந்தியா பார்வதியை தனியாக ஏன் போன ஏதாவது அந்த சாமியார் பண்ணி இருந்தா என்ன பண்ணுவ என்ன திட்டுகிறார். அதற்கு கண்ணம்மா திடாதீங்க எனக் கூற பிறகு மூவரும் இணைந்து சாமியார் ஆட்டு விடுவதற்காக திட்டம் போடுகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து ஊரில் உள்ள மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து சாமியாரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் சாமியார் சிவகாமியின் குடும்பத்தில் உள்ள மூன்று பெண்கள் தீச்சட்டி ஏந்த வேண்டும் என்று கூறிய நிலையில் பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சிவகாமியின் குடும்பத்தில் உள்ளவர்களை மிரட்டுகிறார்கள் இதன் காரணமாக சந்தியா, கண்ணம்மா, பார்வதி மூவரும் தீச்சட்டி ஏந்துகிறார்கள் இந்த வார இறுதிக்குள் கண்டிப்பாக சாமியார் மற்றும் அர்ச்சனா இருவரும் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment