தனது ஆசைக்காக பார்வதியை பலிகடாக்கிய அர்ச்சனா.! தனது போலீஸ் மூளையினால் கண்டுபிடித்த சந்தியா.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது தற்போது பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் வில்லி அர்ச்சனா செய்யும் கேவலமான வேலையினால் தற்பொழுது பார்வதியின் வாழ்க்கை மோசமாக உள்ளது.

பார்வதி கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் பொழுது பொறுக்கி என்று தெரியாமல் விக்கி என்பவனை காதலித்து வந்தாள் பிறகு பார்வதியிடம் தப்பாக நடந்துகொண்டதால் அவனின் சுயரூபம் தெரிந்தது அவனை விட்டு விலகினாள்.

எனவே இதனை அனைத்தையும் தெரிந்து கொண்ட அர்ச்சனா பார்வதியின் வீட்டில் இருப்பவர்கள் பார்த்த வைத்த பாஸ்கரை தன்னுடைய தங்கை பிரியாவை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதற்காக பல திட்டங்களைப் போட்டு அவர்களது வீட்டிற்கு சென்று இதனைப் பற்றி பேசி வருகிறார்.

இதற்கு முன்பு பாஸ்கர் அர்ச்சனாவின் தங்கை தான் பொன் பார்ப்பதற்காக வந்தான் ஆனால் அந்த இடத்தில் பார்வதியை பார்த்ததும் மிகவும் பிடித்து விட்டதால் பார்வதியை தான் திருமணம் செய்து கொள்வேன் என முடிவெடுத்தான். பிறகு தற்பொழுது பார்வதி மற்றும் பாஸ்கர் இருவருக்கும் திருமணம் செய்ய இருக்கும் நிலையில் பாஸ்கர் மிகவும் வசதியானவர் என்பதால் அர்ச்சனா தனது தங்கைக்கு திருமணம் செய்துகொள்ள வைக்க வேண்டும் என்பதற்காக பல திட்டங்களை செய்து வருகிறாள்.

அந்த வசதியான வாழ்க்கைக்காகவும், அர்ச்சனாவை பல இடங்களில் பார்வதி அசிங்கப்படுத்தியதாலும், தற்போதெல்லாம் பார்வதி சந்தியாவிற்கு சாதகமாக இருப்பதாலும் அர்ச்சனா பார்வதியின் மீது மிகவும் கோபமாக இருந்துவருகிறார்.  இப்படிப்பட்ட நிலையில் விக்கி தற்பொழுது பார்வதிக்கு போன் செய்து மிரட்டுகிறான் எனவே பார்வதி தன்னுடைய திருமணத்தில் பெரிதாக ஈடுபாடு காட்டாமல் பயத்தில் இருந்து வருகிறாள்.

எனவே பார்வதியை பார்த்ததும் இதனைப்பற்றி சந்தியா கண்டுபிடித்து அர்ச்சனாவிற்கு சரியான பாடம் புகட்ட இருக்கிறாள் எனவே இந்த முறையும் அர்ச்சனா இதேபோல் மாட்டிக் கொண்டால் இவளை வீட்டை விட்டு கண்டிப்பாக செந்தில் அனுப்பி விடுவான்.

Leave a Comment