புதிய ப்ரோமோ வீடியோவால் சிக்கலில் மாட்டிகொண்ட விஜய் தொலைக்காட்சி.! ஐபிஎஸ் அதிகாரி பரபரப்பு கமென்ட்.!

தமிழ் சின்னத்திரையில் அதிகம் ரசிகர்கள் பட்டலத்தை உருவாக்கியுள்ள நிறுவனம் என்றால் அது விஜய் டிவி தொலைக்காட்சி தான் இதில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு சீரியலுக்கும் மக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் விஜய் தொலைக்காட்சியில் விரைவில் தொடங்கவுள்ள சீரியல் தென்றல் வந்து என்னைத் தொடும், என்ற சீரியல் தான் இதில் பவித்ரா மற்றும் வினோத் பாபு ஆகிய இருவரும் இணைந்து ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இத்தொடரின் ப்ரோமோ வீடியோ ஒன்று ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி ஒரு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆம் ப்ரோமோவில் கதாநாயகன் கதாநாயகியை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று தாலி கட்டியது போல காண்பிக்கப்பட்டுள்ளது.

இணையத்தில் பரவிய இந்த இந்த ப்ரோமோ வீடியோவைப் பார்த்த டாக்டர் வருண் குமார் ஐ.பி.எஸ், இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் கமெண்ட் தெரிவித்துள்ளார். அதில் இதுபோன்ற செயல்களுக்கு எதிரான சட்டங்களில் நீண்ட பட்டியலை சுட்டிக்காட்டி கடுமையான தண்டனைக்கு வழிவகுக்கும் எனவும் இதனால் 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் எனவும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் ரசிகர்களும் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து வருகின்றார். அதுவும் முன்பெல்லாம் பாடலை தான் டேமேஜ் செய்து வந்தீர்கள், பார்த்தபோது பாடல் வரிகளையும் டேமேஜ் செய்கிறீர்கள் என்று கமென்ட் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

 கமெண்டை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

Leave a Comment