நடிகர் விக்ராந்தை பழிவாங்க பாண்டியன் ஸ்டோர் சீரியலை கையில் எடுத்த விஜய் டிவி.? காரணம் என்ன தெரியுமா.?

விஜய் டிவி தொலைக்காட்சி சூப்பரான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதையும் தாண்டி குடும்ப இல்லத்தரசிகளை கவரும் வகையிலான சீரியல்களையும் கொடுத்து வருகிறது அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் இல்லத்தரசிகளின் தாண்டி காதல் ஜோடி, ரசிகர்களையும் கவர்ந்து உள்ளது அந்த அளவிற்கு சீரியல் சூப்பராக அமைந்திருக்கிறது.

இதில் நடிக்கும் ஒவ்வொருவருக்கும் நல்ல ரோல் கொடுக்கப்பட்டுள்ளது இதனால் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து உள்ளதோடு மட்டுமல்லாமல் டிஆர்பி யில் நல்லதொரு முன்னேற்றத்திற்கு எடுத்துச்செல்கிறது. பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மூர்த்தியின் அம்மாவாக லட்சுமி என்ற கதாபாத்திரம் இழந்தது போல காட்டி உள்ளனர்.

அந்த காரணத்தினால் இவர் இனி பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடிக்க முடியாது கதா பாத்திரம் முடிந்து விட்டது என கூறப்படுகிறது. இந்த கதாபாத்திரத்தில் நடித்தவர் வேறு யாருமல்ல ஷீலா இவர் விஜய்யின் தம்பியான விதார்த்தின் அம்மா என்பது குறிப்பிடதக்கது.

இவர் சீரியலில் இறந்ததுபோல் காண்பித்தால் தான் டி ஆர் பி யில் முன்னேற முடியும் என ஒருபக்கம் செய்திகள் வருகின்றன மறுபக்கம் இதற்கு இன்னொரு காரணமும் உண்டு அது என்னவென்றால் பாண்டியன் ஸ்டோர் சீரியல் தொடரில் ஷீலா நடித்து வந்ததால் விஜய் டிவியில் விக்ராந்தையும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் இழுத்து போட்டு விடலாமென விஜய் டிவி கணக்கு போட்டது.

அந்த வகையில் பிக்பாஸ் போட்டியாளராக கலந்து கொள்ள விஜய்டிவி தரப்பினர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் அதற்கு அவரும் முதலில் ஓகே சொல்லி பின் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் survivor நிகழ்ச்சி மாறினார். இப்போது இருக்கின்ற சூழலில் டிவிக்கு மிகப்பெரிய போட்டியாக இருப்பது ஜீ தமிழ் தான் அந்த பக்கம் அவர் சென்றது. அந்த காரணத்தினால் கூட ஷீலா ரோலை சீக்கிரம் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

Leave a Comment