மூர்த்திக்கு விழும் பெரு அடி.! மீள முடியாமல் நடுத்தெருவுக்கு வரப்போகும் பாண்டியன் ஸ்டோர்.! பரபரப்பான எபிசோட்.

அப்பொழுதெல்லாம் கூட்டுக் குடும்பம் என்ற ஒன்று மறந்து போய் அதனை கூகுளில் சர்ச் பண்ணி தெரிந்து கொள்ளும் அளவிற்கு ஆகிவிட்டது நம்மளுடைய நிலைமை. எனவே விஜய் டிவி  அனைவருக்கும் கூட்டுக்குடும்பம் என்பதைப்பற்றி உணர்த்தும் வகையில் நான் அண்ணன் தம்பிகளில் உறவினையும், தனது கணவனின் தம்பிகளை தனது மகன்கள் போல் பார்த்துக் கொள்ளும் அண்ணியின் பாசத்தையும், மருமகள்களின் ஒற்றுமையையும் வைத்து ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

முத்த மருமகளான தனத்திற்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் பல வருடங்கள் கழித்து குழந்தை பிறந்தது தற்போது அதே நிலைமை முல்லைக்கும் வந்துள்ளது. இயற்கையாக இதற்கு மேல் குழந்தை பிறக்க வாய்ப்பு இல்லை என்பதனால் செயற்கை முறையில் கருத்தரிப்பு செய்வதற்காக பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் 5 லட்ச ரூபாய் பணத்தை அவசரமாக ரெடி பண்ண வேண்டிய நிலைமை வந்துள்ளது.

எனவே மூர்த்தி கந்துவட்டியாக இருந்தாலும் பரவாயில்லை மீட்டர் வட்டியாக இருந்தாலும் பரவாயில்லை என்று யாரைப் பார்த்தாலும் கடன் கேட்டு வருகிறான். இப்படிப்பட்ட நிலையில் இதற்கு முன்பே பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தினர் அனைவருக்கும் சரியான அறை இல்லாததால் புதிய வீடு கட்ட திட்டமிட்டு இருந்தார்கள்.

ஆனால் எதிர்பாராத விதமாக முல்லைக்கு இப்படி ஒரு பிரச்சனை வந்தது எனவே முல்லை கோவில் கோவிலாக சென்று தன்னை வருத்திக்கொண்டு வருகிறார் எனவே வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் அவளை பார்த்து கஷ்டப்பட்டு வருகிறார்கள்.

இதன் காரணமாக உடனே இவருக்கு சிகிச்சை செய்ய வேண்டும் என ஐந்து லட்ச ரூபாயை பிரட்ட முடிவு செய்துள்ளார்கள். இவ்வாறு கடன் வாங்குவதால்  பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்  மீண்டும் பழைய நிலைமைக்கு மாறி விடுவோம் என்று மீனா நினைத்து  வருகிறாள்.

Leave a Comment