பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டிற்கு சென்று சாபம் விட்ட பார்வதி.! ஜீவாவை தனது கடையில் வேலை செய்யக் கூறி வற்புறுத்தும் மீனாவின் அப்பா.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தொடர்ந்து ஏராளமான திருப்பங்கள் இருந்து வரும் நிலைகள் தற்பொழுது கதிர் ஹோட்டலில் வேலை செய்து கொண்டிருக்கும் நிலையில் அதனை முல்லையின் அப்பா அம்மா இருவரும் பார்த்து விடுகிறார்கள். பார்த்தவுடன் அதிர்ச்சனைந்த நிலைக்கு இதனைப் பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் எனும் கதிர் கூற அதனை முல்லையிடம் முதலில் கூறுகிறார்கள்.

இதனால் வருத்தத்தை வரும் நிலையில் பிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டிற்கு செல்கிறார் பார்வதி அங்கு மீனா, கண்ணன், ஐஸ்வர்யா, மூர்த்தி ஆகியோர்கள் இருக்கும் நிலையில் தனது மருமகன் எச்ச இலை எடுப்பதை பார்த்த வருத்தத்தில் மூர்த்தியிடம் தொடர்பு பல கேள்விகளை கேட்கிறார்.

சின்ன வயதிலிருந்து கதிரிடமிருந்து அனைத்து வேலையும் சுரண்டிக்கொண்டு தற்பொழுது வசதி வந்தவுடன் அவரை விரட்டி விட்ருங்க என தொடர்ந்து தனது மனதில் தோன்றிய அனைத்தையும் கொட்டி தீர்க்கிறார். இவர் சொன்ன பிறகுதான் மூர்த்திக்கு கதிர் ஹோட்டலில் வேலை செய்து கொண்டிருப்பது தெரிய வருகிறது இதனால் மூர்த்தி வருத்தப்படுகிறார்.

பிறகு பார்வதியை நீங்கெல்லாம் நல்லாவே இருக்க மாட்டீங்க என்ன சாபம் விட மீனா இதற்கு மேல் எங்களுக்கு சாபம் விடாதீங்க என கூறுகிறார். அதன் பிறகு நான் நியாயத்தை கேட்க மட்டும் தான் வந்தேன் என பார்வதி கூறுகிறார். ஒரு பக்கம் முல்லையின் அப்பா வீட்டிற்கு சென்று அங்கு கதிர் ஹோட்டலில் வேலை செய்திருப்பதை பற்றி கூறுகிறார்.

ஒரு பக்கம் அடுத்த கதிர் என்ன செய்யப் போகிறார் என்பது தெரியாமல் இருந்து வரும் நிலையில் மீனாவின் அப்பா பாண்டியன் ஸ்டோர்ஸ் கடைக்கு சென்று ஜீவாவிடம் தனியாக என்னால் அனைத்து வேலைகளையும் பார்த்துக் கொள்ள முடியவில்லை என கூறுகிறார். ஜீவாவை தனது கடைக்கு வந்து அனைத்து வேலைகளையும் பார்த்துக் கொள்ளுமாறு கூறுகிறார்.

இதற்கு ஜீவா ஏற்கனவே கதிர் போன நிலையில் அண்ணி மட்டும் அதிகமாக வேலை செய்து கொண்டிருக்காங்க அவங்களுக்கு உதவி செய்யணும் என கூறி மறுக்கிறார் ஆனால் மீனாவின் அப்பா எப்படியாவது ஜீவாவை தனது கடைக்கு அழைத்து சென்றுவிட வேண்டும் என திட்டம் போடுகிறார். இவ்வாறு இதோ ஒரு சந்தர்ப்பத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை விட்டு பிரிந்தால் அந்த குழப்பம் என்னாவது என்பது கேள்வி குறியாக இருக்க வருகிறது.

Leave a Comment