பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தை பிரிப்பதற்காக திட்டம் தீட்டிய மீனாவின் அப்பா.! இனிவரும் எபிசோட்கள்

தற்பொழுதெல்லாம் கூட்டுக் குடும்பம் என்ற ஒன்று இல்லாமல் போய்விட்டது எனவே சீரியலிலாவது கூட்டுக் குடும்பத்தை பற்றி பார்த்து தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற ஒரு சீரியலை ஒளிபரப்பி வருகிறார்கள். இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்த சீரியலில் மீனாவின் தந்தை மிகப்பெரிய பணக்காரர் இவருக்கு இரண்டு மகள்கள் என்பதால் மருமகள் தனது சொத்துக்களையும் வியாபாரத்தையும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக மீனாவின் அப்பா ஜீவாவை எப்படியாவது தன் பக்கம் ஈர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக பல திட்டங்களை தீட்டி வருகிறார் இதனால் பல பிரச்சனைகளையும் சந்தித்து வருகிறார்.

என்னதான் மீனாவின் அப்பா ஜீவாவின் மீது மிகவும் அன்பாக நடந்துகொண்டாலும் ஜீவாவிற்கு தனது அண்ணன் அண்ணி போன்றவர்களை தான் மிகவும் பிடித்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் ஜீவாவின் மனதை மாற்ற வேண்டும் என்பதற்காக மீனாவின் அப்பா  நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அப்பொழுது மீனா மற்றும் பாண்டியன் ஸ்டோர் கூட்டத்தினரிடம் எனக்கு யாருமே இல்லை என் வியாபாரத்தை யார் பார்த்துக் கொள்வது என வருத்தமாக பேசி புலம்பி இருந்தார்.

இவரின் திட்டத்தை அறியாத மூர்த்தி நீங்கள் எதை பற்றியும் கவலைப்பட வேண்டாம் உங்களுடைய உடம்பு சரியாகும் வரை ஜீவா அனைத்து பொறுப்புகளையும் மிகவும் நன்றாகப் பார்த்துக் கொள்வான் என வாக்களித்துள்ளார். எனவே ஜீவாவும் தற்பொழுது பாண்டியன் ஸ்டோர் கும்பத்தில் இருந்து வெளி வந்து மீனாவின் அப்பா வியபாரத்தை பார்த்து வருகிறான்.

எனவே மீனா தனது அப்பா மிகவும் பணக்காரர் என்பதற்காக ஜீவாவை எப்படியாவது தன் பக்கம் இருக்க வேண்டும் என்பதற்காக முடிவு செய்துள்ளார் இவ்வாறு மீனா மற்றும் மீனாவின் அப்பா இருவரும் இணைந்து ஜீவாவை தனிக் குடும்பமாக்கவுள்ளார்கள். பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் மூர்த்தி-தனம், முல்லை-கதிர், கண்ணன்-ஐஸ்வர்யா இவர்கள் அனைவரும் ஒரே குடும்பமாக வாழ இருக்கிறார்கள் என்பதுதான் இனி வரும் எபிசோடுகளில் ஒளிபரப்பாக உள்ளது.

Leave a Comment