கண்ணன், கதிரை நாக்கு புடிங்கிக்கிட்டு சாகுற மாதிரி கேள்வி கேட்ட மூர்த்தி.! சுக்குநூறாக உடைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்..

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தொடர்ந்து விறுவிறுப்பான எபிசோடுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் தற்பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமே இரண்டாகப் பிரிந்துள்ளது மிகப்பெரிய வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது சமீப காலங்களாக ஜீவா செலவுக்கு பணம் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார். மூர்த்தியிடம் பணம் கேட்டும் அவர் குறைவான பணத்தை தருகிறார் இதனால் கோபத்தில் இருந்து வரும் நிலையில் மறுபுறம் கதிர் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹாட்டலில் இருந்து வரும் பணத்திணையும் வைத்திருக்கும் நிலையில் இவரை அடுத்து கண்ணன் தான் சம்பாதிக்கும் பணத்தில் பாதியை எடுத்துக்கொண்டு மீதியையும் வீட்டிற்கு தருகிறார்.

இவ்வாறு இவர்களிடம் செலவுக்கு பணம் இருக்கும் நிலையில் ஜீவா மட்டும் இவர்களை விட அதிகமாக வேலை செய்தும் பணம் இல்லாமல் இருந்து வருவது அவருக்கு வேதனையை ஏற்படுத்துகிறது. எனவே செலவுக்கு மீனாவின் அப்பா அடிக்கடி பணம் தந்தாலும் அதனை வாங்கிக் கொள்ளாமல் இருந்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் நேற்று எபிசோட் மீனாவின் தங்கைக்கு மிகவும் சிறப்பாக திருமணம் நடைபெற்று முடிந்தது இதில் மூர்த்திக்கு தெரியாமல் கதிர், கண்ணன் இருவரும் தனித்தனியாக மொய் போடுகிறார்கள்.

பிறகு மூர்த்தி 50ஆயிரம் கொடுத்து மொய் போட சொல்கிறார் ஆனால் கண்ணன் அந்த பணத்தினை மூர்த்தி தனத்தின் பெயரில் போட்டு விடுகிறார். மீனாவின் அப்பா மொய் லிஸ்ட்டை எடுத்து வந்து மீனாவிடம் மாப்பிள்ளை பெயரில் எந்த ஒரு பணமும் போடவில்லை எனக் கூற பிறகு இது ஜீவாவிற்கும் தெரிய வருகிறது. எனவே கோவத்தில் ஜீவா இதற்கு மேல் நான் அந்த வீட்டிற்கு வர முடியாது உங்களுடைய தம்பிகள் அவர்கள் இருவரும் தான் என கோபப்பட்டு இங்கிருந்து கிளம்ப சொல்கிறார்.

உடனே மாப்பிள்ளையே கிளம்ப சொல்லியாச்சு கெலம்புங்கள் என மீனாவின் அம்மா, அப்பா கூறுகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் வீட்டிற்கு வந்த பிறகு தான் கண்ணன் கதிர் இருவரும் தனித்தனியாக மோய் போட்டது மூர்த்திக்கு தெரிய வருகிறது. எனவே உங்களுக்கு அவ்வளவு திமிரா வேலைக்கு போய் ஒரு மாசம் கூட ஆகல அதுக்குள்ள தனியா மொய் போடுற அளவுக்கு வளர்ந்துட்டியா என்ன மூர்த்தி சண்டை போடுகிறார் இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.

Leave a Comment