என்ன வேணும்னே எல்லாரும் முன்னாடியும் அசிங்கப்படுத்துறீங்களா.? இனிமே அவங்க ரெண்டு பேரும் தான் உங்க தம்பி.. என்ன விட்டுடுங்க என கதறும் ஜீவா.! பரபரப்பான எபிசோட்களுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்..

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் டிஆர்பியில் முன்னணி வகித்து வருகிறது. நான்கு அண்ணன் தம்பிகளின் பாச உறவினை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருவதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது மொய் போடும் விஷயத்தால் ஜீவா பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினரை விட்டு பிரிந்துள்ளார். அதாவது கடந்த வாரங்களாக மீனாவின் தங்கையின் திருமணத்தை வைத்து தான் எபிசோடுகள் ஒளிபரப்பாகி வந்தது. பத்திரிக்கை வைப்பதற்காக தன்னுடைய மாமனாருடன் ஜீவா செல்ல அங்கு பெட்ரோல் போட கூட காசு இல்லாமல் அவருடைய கையை எதிர்பார்த்து வருகிறார்.

இது ஜீவாவிற்கு மிகவும் மன கஷ்டத்தை உண்டாக்குகிறது எனவே மூர்த்தியிடம் பணம் கேட்டாலும் மிகவும் குறைவான பணத்தை தருகிறார். ஆனால் கதிர் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹோட்டலில் வரும் பணத்தை செலவுக்கு வைத்துக் கொள்கிறார். அதேபோல் கண்ணனும் தான் சம்பாதிக்கும் பணத்தில் பாதியை மட்டுமே வீட்டிற்கு தருகிறார் ஆனால் ஜீவாவிடம் 50 ரூபாய் கூட பணம் இல்லாமல் இருந்து வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் மீனாவின் தங்கை திருமணத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்கள் அனைவரும் மொய் போட்டு உள்ளனர். அதாவது தன்னுடைய குடும்பத்தினர்களிடம் சொல்லாமல் கண்ணன் தனியாக மொய் போட அதே போல் கதிரும் தனியாக மொய் போடுகிறார்.

ஆனால் மூர்த்தி பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் பெயரில் ஐம்பதாயிரம் மொய் போடுமாறு கண்ணனிடம் கொடுக்க அவர் மூர்த்தி, தனம் பெயரில் எழுதி விடுகிறார். எனவே இதனை ஜகார்த்தனன் பார்த்துவிட்டு மீனாவிடம் கூற அதில் ஜீவா, மீனா பெயரைத் தவிர அனைவருடைய பெயரும் இருக்கிறது.

எனவே இதனை பார்த்துவிட்டு கோபமடைந்த ஜீவா நான் உங்களுக்கு என்ன துரோகம் பண்ணுன அண்ண என்ன இப்படி அவமானப் படுத்துறீங்க.. இங்க பாருங்க என் பேரையும் மீனா பேரையும் விட்டுட்டு மொய் எழுதி இருக்கீங்க நான் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துல இல்லன்னு எல்லாருக்கும் சொல்லிட்டீங்கல.. எனக் கூற அதற்கு மூர்த்தி என்னடா பேசுற ஜீவா எனக் கேட்கிறார் உடனே ஜீவா நடிக்காதீங்க அண்ண எனக் கத்த தனம் ஜீவா வாடா வீட்டிற்கு போய் ஏதா இருந்தாலும் பேசிக் கொள்ளலாம் என கூறுகிறார். என்ன விட்டுடுங்க இனிமே நான் அந்த வீட்டுக்கு வர மாட்டேன் இவங்க ரெண்டு பேரும் தான் உங்க தம்பிங்க.. இவங்கள கூட்டிட்டு இங்கிருந்து போங்க எனக்கு கூற அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

Leave a Comment