ஐஸ்வர்யா சொன்ன பொய்யை கண்டுபிடித்த மீனா.! எல்லா முன்னாடியும் அவமானமா போச்சே.. கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கலாம்.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது. அதில் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வருவதால் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சீரியலாக கொடிகட்டி பறந்தது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்

இதைத்தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இரண்டாவது மருமகளாக நடித்து வரும் மீனா வில்லியாகவும் இருந்தாலும் ஒரு பக்கம் காமெடியாகவும் நடித்து வருவதால் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தது. குறுக்கு தனமாக ஏதாவது கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பார். என்று ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தது

இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கி லட்சுமி சீரியல் டிஆர்பியில் கலக்கிக் கொண்டு வருகிறது. தற்பொழுது 2 சீரியலும் இணைந்து டிஆர்பியில் இணைந்து மெகா சங்கமாக நடந்து வருகிறது. இந்த இரண்டு சீரியல்களையும் ஒன்றாக பார்ப்பதால் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக பார்த்து வருகிறார்கள்.

இதைத்தொடர்ந்து எல்லோரும் ஒன்றாகக் கூடி பேசிக்கொண்டிருக்கும்போது அப்போது செல்வி ஐஸ்வர்யாவிடம் வயதை கேட்கிறார். அதற்கு ஐஸ்வர்யா என்னுடைய வயது பத்தொன்பது தான் என்று கூறுகிறார். அதைக் கேட்ட மீனா ஷாக் ஆகி போன வருஷம் தானே பிறந்தநாளை கொண்டாடி வந்த உனக்கு 20 வயது தானே என்று அவளிடம் வழக்காடுகிறார். மீனா

எனவே ஐஸ்வர்யாவை கலாய்த்ததும் கண்ணன் வாய்தவறி தான் ஐஸ்வர்யா சொல்லியிருப்பா என்று முன்வந்து கூறுகிறார். எப்பவும் போல தான் கண்ணனுக்கும் மீனாவுக்கும் போட்டி நடந்து கொண்டே தான் இருக்கும் இங்கே வந்தும் ஆரம்பித்து விட்டார்கள். என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் என்ன ரெண்டு பேரும் பேசிக் கொண்டே இருக்கிறீர்கள். வேற எதுவும் இல்லையா என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து அந்த எபிசோடை ரசித்து வருகிறார்கள். அடுத்து என்ன தான் நடக்கும் என்பதை காத்திருந்து பார்ப்போம்.

Leave a Comment