பருத்திவீரன் பட பாணியில் முல்லையை டாவடிக்கும் கதிர்.! முடியலடா சாமி..

அண்ணன் தம்பி குடும்ப பாசங்களை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி சீரியல்களில்  ஒன்றாக டிஆர்பி-யில் முன்னணி வகித்து வருகிறது. இப்பொழுது எல்லாம் பெரும்பாலும் அனைவரும் தனித்தனியாக வாழ ஆரம்பித்து விட்டார்கள் கூட்டுக்குடும்பம்  என்ற ஒரு வார்த்தையை இல்லாத அளவிற்கு அழிந்துவிட்டது.

அந்தவகையில் கூட்டுக் குடும்பமாக இருந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் அழகாக இருக்கும் என்பதை மையமாக வைத்து இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருவதால் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  இந்நிலையில் பல திருப்புமுனைகளுடன் விறுவிறுப்பாகவும் நடைபெற்று வந்தாலும் இந்த சீரியலில் தற்போதுதான் அனைத்து பிரச்சனைகளும் முடிந்துள்ளது.

அந்த வகை பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் சாதாரண மளிகைக் கடையிலிருந்து டிபார்ட்மெண்ட் ஸ்டோர் ஒன்றை திறக்க உள்ளன. எனவே கடை திறப்பு விழாவிற்கு அனைவரும் புது டிரஸ்களை பாசத்துடன் முல்லை தைத்து கொடுக்கிறார். அதாவது கயல் பாப்பாவிற்கு பாவாடை சட்டை மற்றும் மீனா,ஐஸ்வர்யா, தனம் ஆகியோர்களுக்கு ஜாக்கெட் உள்ளிட்டவற்றை முல்லையே தனது கைகளால் தைத்து கொடுக்கிறார்.

இவர்களைத் தொடர்ந்து கதிருக்கும் ஒரு சட்டையை தைத்து வைத்துள்ளார்.பிறகு கதிர் கடை திறப்பு விழாவிற்கு இதனை போட்டுக் கொள்கிறேன் என கூற முல்லை கதிரின் தோள்மீது சாய்ந்து கொண்டாள்.அந்த சட்டையை போட்டுக் கொண்ட கதிரை கட்டிப்பிடித்து கொண்ட முல்லையிடம் சட்டை கசங்கிட போகுது. என் பொண்டாட்டி தைத்துக் கொடுத்த சட்டை என்று சொல்லி சிரிக்கின்றான்.

சில நாட்களாகவே ரொமான்ஸ் காட்சிகள் இடம் பெறாமல் இருந்த நிலையில் தற்பொழுது இதனை பார்த்த ரசிகர்கள் இது என்ன பருத்திவீரன் கார்த்திக் ரேஞ்சுக்கு இருக்கு என்ற கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Leave a Comment