பாண்டியன் ஸ்டோர் சீரியல் ரசிகர்களை உலுக்கிய செய்தி.! அதிர்ச்சியில் ரசிகர்கள்

பிரபல விஜய் டிவியில் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவர் மனதையும் கொள்ளை அடித்த சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் தொடர்ந்து மூன்று பிரபலங்கள் மறைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திவுள்ளது.

ஒரே சீரியலில் அடுத்தடுத்து மூன்றுபேர் மறைந்ததால் சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என்று அனைவரும் பெரும் சோகத்தில் இருந்து வருகிறார்கள். இந்த வகையில் மூன்றாவதாக நடிகர் வெங்கட் சபா மறைந்துள்ளார். இந்த தகவல் அந்த சீரியலின் நடிகர்,நடிகைகளுக்கு சோகத்தின் உச்சிக்கே  சென்றுள்ளது.

சித்ரா: இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைவதற்கு மிக முக்கிய காரணமே முல்லை கதாபாத்திரம் தான். முல்லை மற்றும் கதிர் இவர்களின் ஒன் ஸ்கிரீன் லவ் ரசிகர்கள் மத்தியில் வெகுவாக கவரப்பட்டது. இந்த சீரியல் vj சித்ராவிற்கு சினிமா வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இவ்வாறு பிரபலமடைந்த இவர் பிரபல நட்சத்திர ஹோட்டலில் மறைந்தார்.

chithra 1

நெல்லை சிவா : பல திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து அதன்பிறகு சின்னத்திரைக்கு அறிமுகமானார். இவர் இந்த சீரியலில் குமரேசன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இவரும் சமீபத்தில் மாரடைப்பு காரணமாக மறைந்தார்.

nellai siva

வெங்கட் சுபா: தற்பொழுது இவர் நடிக்கவில்லை என்றாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் அறிமுகமாகும் போது ஜெகநாதன் என்ற கதாபாத்திரத்தில் மீனாவின் அப்பாவாக நடித்திருந்தார். இவர் இன்று கொரோனா பாதித்து மறைந்துவிட்டார்.

vengat sapa

இதனை அறிந்த ரசிகர்கள் என்னடா இது பாண்டியன் சீரியல்ல நடிச்ச ஒவ்வொரு ஆளும் இருந்துட்டே இருக்காங்க எனக்கூறி ரீப் வெங்கட் சபா பாண்டியன் ஸ்டோர் என கூறி உள்ளார்கள். அதோட தற்பொழுது கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருவதால் தொடர்ந்து பல திரைப்பிரபலங்கள் மறைந்து வருகிறார்கள் .

pandiyan stores

Leave a Comment

Exit mobile version