மீண்டும் பாண்டியன் ஹோட்டலுக்கு ஏற்பட்ட பிரச்சனை.! அக்காவின் கையில் சூடு வைத்த முல்லை..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் கூட்டு குடும்பத்தை மையமாக வைத்து பல பிரச்சனைகளோடு மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இப்பொழுது கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள் பிரிந்து தனித்தனியாக வாழும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இருந்தாலும் அண்ணன் தம்பிகளின் பாசம் மாறவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.இப்படிப்பட்ட நிலையில் கதிர் புதியதாக ஹோட்டல் ஒன்றை ஆரம்பித்துள்ளார் மேலும் அந்த ஹோட்டலில் முதல் நாளில் ஆயிரம் ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளது இதன் காரணமாக முலயின் அக்கா மல்லிகா கதிரிடம் ஒரு மாதத்தில் 50 ஆயிரம் லாபத்தை எடுத்துக்காட்டு என சவால் விடுகிறார்.

மேலும் இந்த சவாலை கதிரம் ஏற்றுக் கொண்ட மிகவும் கடுமையாக உழைத்து வருகிறார். இத்தனை நாளாக மல்லிகா கதாபாத்திரம் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இல்லாமல் இருந்து வந்த நிலையில் தற்போது கதிரின் ஹோட்டலுக்கு ஆப்பு வைக்க வேண்டும் என்பதற்காக அறிமுகப்படுத்தி உள்ளது. கதிர் என்ன செய்தாலும் அதனை மலிங்கா அபச குணமாக பேசுவது வழக்கமாக வைத்திருக்கிறார்.

அந்த வகையில் இன்றாவது கடையில லாபம் வருமா என கிண்டல் செய்கிறார் அதனால் சூடு கரண்டியை எடுத்து முல்லை மல்லிகாவின் கையில் வைத்து விடுகிறார் மேலும் எப்பவாவது உனக்கு புத்தி வரட்டும் வாய மூடிக்கிட்டு இரு இது போல முறைக்கிறார் மேலும் இதனைத் தொடர்ந்து இந்த வீட்டின் மூன்றாவது மருமகள் ஐஸ்வர்யா பியூட்டி பார்லர் திறப்பதில் ஆர்வமாக உள்ளார்.

எனவே மீனா கண்ணனிடம் இப்பவே உன் பொண்டாட்டி உன்னை மதிப்பதில்லை இதில் அவர் சம்பாதித்து விட்டானா அவ்வளவுதான் என ஏத்தி விடுகிறாள். இவ்வாறு தனம் மூர்த்தியிடம் ஐஸ்வர்யா பியூட்டி பார்லர் திறப்பதை பற்றி பேசுகிறார்கள் இதற்கு மூர்த்தி பியூட்டி பார்லர் திறக்க சம்பாதித்தாலும் வீட்டில் கடையை நடத்த அனுமதிக்கவில்லை இதன் காரணமாக ஐஸ்வர்யா எப்படியாவது பியூட்டி பார்லர் வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

Leave a Comment