பணம் இல்லையினா பொண்டாட்டிய அனுப்புறியா என்று கேட்ட ஆஃபீஸர்கள்.! கோபத்தில் அடித்த கண்ணன்.. அரஸ்ட் செய்யப்பட்ட கதிர், எதுவும் புரியாமல் கதறும் முல்லை

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்பொழுது யாரும் எதிர்பராத வகையில் மிகப்பெரிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதாவது கண்ணன் ஐஸ்வர்யா இருவரும் ஆடம்பரமாக வாழ்ந்து வரும் நிலையில் கண்ணன் எவ்வளவு சொன்னாலும் கேட்காமல் ஐஸ்வர்யா தொடர்ந்து கிரிடிட் கார்டு மூலம் பல பொருட்களை வாங்கி உள்ளார்.

மேலும் வளைகாப்பு நிகழ்ச்சியும் பெரிய அளவில் நடக்க இருக்கும் நிலையில் அதற்காக வட்டிக்கு கடன வாங்கி உள்ளார்கள் இப்படிப்பட்ட நிலையில் கிரிடிட் கார்டு மூலம் பொருட்களை வாங்கியதால் பணம் கட்ட வேண்டும் என தொடர்ந்து பேங்கில் இருந்து ஆபிஸர்கள் வந்து கண்ணனை கேட்டு வந்தனர். அதற்கு ஐஸ்வர்யாவும் இன்னும் ஒரு வாரத்தில் எப்படியாவது தந்து விடலாம் என சமாளித்து வந்த நிலையில் கண்ணன் பயத்திலிருந்து வந்தார்.

இவ்வாறு வளைய காப்பு நிகழ்ச்சி பெரிய மண்டபத்தில் நடக்க இருப்பதனால் தனம், மூர்த்தி என அனைவரும் பயப்படுகிறார்கள் எனவே இதற்காக தனம் பணம் ஏதாவது வேண்டுமா என கேட்க அதற்கு ஐஸ்வர்யா அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் என திமிராக பதில் கூறுகிறார். மேலும் வளைய காப்பு நிகழ்ச்சி நடத்துவதற்காக வட்டிக்கு பணம் வாங்கியதை தனத்திடம் கூறக்கூடாது என கண்ணனிடம் ஐஸ்வர்யா சொல்லி விடுகிறார்.

இந்நிலையில் தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மீண்டும் பேங்கில் இருந்து ஆபிஸர்கள் வந்து நீங்கள் வாங்கிய பொருட்களை நாங்கள் எடுத்து செல்கிறோம் பணத்தை கொடுத்து விட்டு வாங்கிய பொருட்களை எடுத்துக் கொள்ளுங்கள் அப்படி பணம் தர முடியவில்லை என்றால் உங்களுடைய பொண்டாட்டிய வேணாம் அனுப்புங்க என கூறுகிறார்கள். எனவே பொண்ணுங்களை தப்பா பேசுற என கண்ணன் ஆபீஸர்களை அடிக்க பிறகு இருவரும் சேர்ந்து கண்ணனை அடித்து விடுகின்றனர்.

இந்த நேரத்தில் கதிர் வீட்டிற்கு வர கண்ணன் நடந்த விஷயங்களை கூறுகிறார் பிறகு கண்ணன் கதிர் இருவரும் அந்த ஆபீசர்களை தேடி செல்கிறார்கள். கதிர் அவர்களை நடு ரோட்டில் வைத்து அடித்து விடுகிறார் எனவே இதனால் கோபமடைந்த ஆபிஸர்கள் கதிரின் மீது வழக்கு பதிவு கொடுக்கிறார்கள். இதன் காரணமாக போலீசார்களும் கதிரை வீட்டிற்கு வந்து அரஸ்ட் செய்ய முல்லை அவர் எந்த தப்பும் பண்ணிருக்க மாட்டார் என அழுகிறார் மேலும் தனம், மூர்த்தி எதுவும் புரியாமல் பதட்டத்தில் இருக்கிறார்கள் இதோடு இந்த ப்ரோமோ நிறைவடைகிறது.

Leave a Comment