யார் சொத்தை யார் அழிக்கிறது.. வேதாளம் முருங்கை மரம் ஏறியது போல் ஜீவாவை மீனா முன்பே திட்டிய ஜகார்த்தனன்.! பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோட்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் இன்றைய எபிசோடில் தனம், மூர்த்தி மற்றும் முல்லையின் அப்பா கோவிலுக்கு செல்கிறார்கள் அங்கு முல்லை குழந்தை இருவரும் நல்லபடியாக இருப்பதனால் 108 தேங்காவை உடைத்து வேண்டுகோளை நிறைவேற்றுகின்றனர். இதனை அடுத்து மறுபுறம்  ஜீவா மீனாவிடம் 100 பேருக்கு அன்னதானம் வழங்க இருப்பதாக பேசிக் கொண்டிருக்கிறார்.

முல்லையும் குழந்தையும் நல்லபடியாக ஆக வேண்டும் என்பதற்காக 100 பேருக்கு அன்னதானம் வழங்க இருப்பதாகவும் எனவே கதிரின் ஹோட்டலில் கூறியிருப்பதாகவும் சொல்ல அதற்கு ஜகார்த்தனன் அன்னதானத்தை நிறைவேற்ற கதிரின் ஹோட்டலில் இருந்து பிரியாக  வாங்கி வழங்க முடிவெடுத்திருக்கிறீர்கள் எனக் கூற அதற்கு ஜீவா அப்படியெல்லாம் கிடையாது பணம் கொடுத்து தான் செய்கிறேன்.

அரிசி, பருப்பு இதெல்லாம் வாங்க எவ்வளவு செலவாகும் எனவே சமையல் மாஸ்டரிடம் இதனைப் பற்றி சொல்லியிருக்கிறேன் இது கதிருக்கே தெரியாது என கூறுகிறார். கதிர் சென்றுவிட ஜகார்த்தனன் மீனாவை தண்ணி எடுத்துட்டு வருமாறு சொல்கிறார் அப்பொழுது தனது மனைவியிடம் எவன் வீட்டு பணத்த யாருக்கு செலவு பண்றதுன்னு ஒரு வெவஸ்தை இல்லையா மாப்பிள்ளை எவ்வளவு வேணாலும் செலவு பண்ணிக்கட்டும் தேவையில்லாம அவங்களுக்கு ஏன் செலவு பண்ணனும் இவங்களுக்கு செலவு பண்றதுக்காக தான் நான் ஓடி ஓடி வேலை செஞ்சி சம்பாதித்து வைத்தானா என கேட்டுக் கொண்டிருக்க இந்த நேரத்தில் மீனா இதனை கேட்டு விடுகிறார்.

எனவே மீனா ஜீவா 7 மணியிலிருந்து நைட் 9 மணி வரைக்கும் வேலை செஞ்சுகிட்டு இருக்கான் அவனுக்கு நீங்க என்ன தரிங்க கேட்கிறார். அதற்கு ஜகார்த்தனன் நான்தான் உங்களுக்கு வேண்டிய பணத்தை எடுத்துக்கோங்க என்று சொல்லிட்டேன்ல மாப்பிள்ளை தான் எடுத்துக்க மாட்டேங்கிறாரு ஏன் கதிர் ஸ்டேஷனில் இருந்தப்ப கூட ஒரு மாசத்துக்கு ஒரு லட்சம் நாலு மாசத்துக்கு நாலு லட்சம் எடுத்துக்கோங்க என கொடுத்தேன் என கூறுகிறார்.

அப்பொழுது மீனா ஐஸ்வர்யாவுக்கு வளைய நடந்து செல்ல என கூறாத இருக்க ஐஸ்வர்யா மீனாவின் அம்மா அது எங்க நடந்துச்சு அதுதான் கதிர் ஸ்டேஷனுக்கு போயிட்டு வந்துட்டாருல என சொல்ல பேசாதம்மா நான் முதல்ல சொல்றதை கேளு ஐஸ்வர்யாவுக்கு கிப்ட் வாங்குவது கூட அவன் ஃப்ரெண்ட் ஒருத்தனுக்கு இடம் வாங்கி கொடுத்தான் அதுல இருந்து வந்த பணத்தை வைத்து தான் வாங்கினதாக கூறுகிறார்.

பிறகு மீனாவும் ஜீவா இருவரும் நூறு பேருக்கு அன்னதானம் வழங்குகிறார்கள். அங்கே ஜீவாவிடம் நீ செய்ற வேலைக்கு பணத்தை எடுத்துக்க வேண்டியது தானே என கேட்க அது எப்படி உங்க அப்பா கிட்ட எனக்கு இவ்வளவு சம்பளம் தான் வேண்டும் என கட்டன் ரைட்டா கேட்க முடியும் எனக் கூறுகிறார். பிறகு மூர்த்தி தனத்திடம் குழந்தை பிறந்து 15 நாள் ஆகும்ல்ல என கேட்க இல்லை இன்னையோடு 17 நாள் ஆச்சு அப்பன வீட்டுக்கு எப்ப அனுப்புவாங்க எனக்  கேட்கிறார். அதற்கு இன்னும் இரண்டு வாரத்தில் அனுப்புவதாக சொல்கிறார். இதனை அடுத்து இரவில் ஜீவாவும் மீனாவும் முல்லையை பார்த்துக் கொள்வதற்காக வெளியில் அமர்ந்து கொண்டிருக்கிறார்கள் பிறகு முல்லைக்கு தலை சீவி விட்டு குழந்தையை பார்ப்பதற்காக கதிர் அழைத்து செல்கிறார் இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.

Leave a Comment

Exit mobile version