சரியான நேரம் பார்த்து மூர்த்தி, ஜீவாவை பழி வாங்கிய ஜகார்த்தன்.! இனிமேல் குடும்பம் சேரவே சேராது..

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.  தொடர்ந்து இந்த சீரியல் பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது ஒட்டுமொத்த குடும்பமும் பிரிந்து சின்னாபின்னமாகி உள்ளது. அந்த வகையில் இதனை பயன்படுத்திக் கொள்ளும் ஜகார்த்தன் மேலும் எப்படியாவது தன்னுடைய மாப்பிள்ளையை பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துடன் சேர விடக்கூடாது என்ற முடிவில் இருந்து வரும் நிலை எதற்காக தொடர்ந்து தன்னுடைய மருமகனை நல்லபடியாக பார்த்துக் கொள்கிறார்.

மேலும் இவருக்கு சூப்பர் மார்க்கெட்டை தருவதாகவும் அப்படி இல்லை என்றால் புதிய வீடும் கட்டித் தருவதாக கூறியிருக்கும் நிலையில் தற்பொழுது மேலும் பிரச்சினை ஒன்றை ஆரம்பித்துள்ளார். அதாவது இன்றைய எபிசோடில் தனம் கயல் பாப்பா ஞாபகம் ஆகவே இருக்கிறது எனக் கூற அதற்கு முல்லையும் எனக்கும் அப்படி தான் இருக்கிறது ஜீவா மாமா தான் கோபத்தில் இருக்காரு ஆனா மீனா அக்காவுக்கு கோவம் இல்லை அவங்க என்ன பண்ணுவாங்க ஜீவா மாமா சொல்றதுக்கான கேட்டாகணும் எனக் கூற பிறகு முல்லை மீனாவுக்கு போன் பண்ணலாம் என கூறுகிறார்.

அதே போல் மீனாவும் வீட்டு ஞாபகமாக இருப்பதாக கூற இந்த நேரத்தில் மீனாவின் அம்மா அது பெரிய அரண்மனை எனக் கூறுகிறார் மேலும் ஆனால் அங்கு நிறைய பேர் இருப்பதாக மீனாக்குற நீ இங்கேயே இரு அது தான் கயலோட எதிர்காலத்திற்கு நல்லது என சொல்ல பிறகு ஜீவாவுக்கு போன் வருகிறது. அதில் ஆர்டர் எடுத்துட்டு வரீங்களா என கேட்க இல்லை இதற்கு மேல் அண்ணன் போனுக்கு போன் பண்ணி ஆர்டர் கேட்டுக்கோங்க எனக்கூறி விட்டு போனை வைத்து விடுகிறார்.

இதனை பார்த்து ஜகார்த்தனன் உடனே மீண்டும் அந்த நபருக்கு போன் செய்து இனிமேல் பாண்டியன் ஸ்டோர்ஸ் கிடைக்கும் எனக்கும் எந்த சம்பளமும் கிடையாது இதற்கு மேல் எனக்கு போன் பண்ண கூடாது மூர்த்திக்கு பண்ணிக்கொள்ளுங்கள் என திட்டிவிட்டு போனை வைத்து விட உடனே அந்த நம்பர் பாண்டியன் ஸ்டோர்ஸ் கடைக்கு சென்று நடந்ததை கதிர் மூர்த்தியிடம் கூறுகிறார்.

எனவே மூர்த்தி கோபப்பட்டு அனைவருக்கும் போன் செய்து அவனுக்கும் இந்த கடைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது யாரும் அவனுக்கு போன் பண்ணாதீங்க அனைவரும் இந்த நம்பருக்கு போன் செய்யுங்கள் என திட்டுகிறார் இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.

Leave a Comment