திடீரென திருமணம் செய்து கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலம்.! வைரலாகும் அழகிய ஜோடியின் புகைப்படம்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பெரும்பாலான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் பிரைம் டைமில் மிகவும் ட்ரெண்டிங்காக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். நான்கு அண்ணன் தம்பிகளின் பாச உறவினை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருவதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

முக்கியமாக முதியவர்கள் மற்றும் இல்லத்தரசிகளின் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று வருகிறது பல பிரச்சனைகள் வந்தாலும் அனைத்து பிரச்சனைகளையும் சமாளித்து அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள். அந்த வகையில் மீனாவின் அப்பாவால் கடை, வீடு என பல பிரச்சனைகளை சந்தித்த நிலையில் தற்பொழுதுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார்கள்.

அதாவது சமீபத்தில் முல்லை கர்ப்பமானது மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியது இதனை அடுத்து புதிய கார் ஒன்றை வாங்கி இருக்கின்றனர் தற்பொழுது மூன்றாவது மருமகள் ஐஸ்வர்யாவும் கர்ப்பமாக இருக்கும் நிலையில் மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு இந்த கதையை மையமாக வைத்ததால் இந்த எபிசோடுகள் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்நிலையில் இந்த சீரியலில் பிரசாந்த் என்ற கதாபாத்திரத்தில் மகேஷ் என்பவர் நடித்து வந்த நிலையில் இவருக்கும் மீனாவின் தங்கை சுவேதாவிற்கும் இந்த சீரியலின் கதைப்படி நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. விரைவில் இவர்களுக்கு திருமணம் நடைபெற இருக்கும் நிலையில் தற்போது திடீரென மகேஷ்க்கு நிஜத்தில் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

makesh
makesh

ஆம், மகேஷுக்கும் பிரேமலதா இருவருக்கும் சென்னையில் உள்ள இவிஸ் திருமண மண்டபத்தில் மிகவும் கோலகலமாக பெற்றோர்களின் முன்னிலையில் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. மகேஷ் தற்பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் முத்தழகு இரண்டு சீரியல்களிலும் அடுத்து வரும் நிலையில் இவருடைய திருமணத்திற்கு முத்தழகு சீரியல் பிரபலங்கள் மட்டும் பங்கு பெற்றார்கள் இப்படிப்பட்ட நிலையில் மகேஷின் அழகிய திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக அனைவரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Leave a Comment