டிஆர்பி-இல் முதலிடம் பிடிக்க மற்றவர்களின் உயிருடன் விளையாடும் விஜய் தொலைக்காட்சி.! இதெல்லாம் கொஞ்சம் ஓவர்..

பிரபல விஜய் டிவியில் பல ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.  அந்த வகையில் கடந்த நான்கு வருடங்களாக தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, மராத்தி என பல மொழிகளிலும் ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ்.இந்நிகழ்ச்சி பொதுவாக சினிமாவில் பிரபலம் அடைய முடியாமல் தவித்து வரும் பலருக்கும் ஒரு நல்ல வாய்ப்பாக அமைகிறது.

அந்தவகையில் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைத்து போட்டியாளர்களுக்கும் கண்டிப்பாக பல திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து வருகிறது. எனவே இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி பலரின் வாழ்க்கையில் விளக்கேற்றி உள்ளது.

இந்நிலையில் தற்பொழுது விஜய் டிவி டிஆர்பி ஏற்ற வேண்டும் என்பதற்காக கடந்த நான்கு வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் கலந்துகொண்டு நடனமாடும் நிகழ்ச்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார்கள்.

இந்நிகழ்ச்சிக்கு பிபி ஜோடிகள் என்ற பெயர் வைத்துள்ளார்கள். அந்தவகையில் நிகழ்ச்சியில் நடுவராக முன்னணி நடிகர் நகுல் மற்றும் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். அந்த வகையில் சென்ற வாரம்தான் இந்நிகழ்ச்சியை மிகவும் பிரமாண்டமாக அறிமுகமானது.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை வேகம் புதிய விஸ்வரூபம் எடுத்துள்ளது. அந்த வகையில் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கேப்ரில்லா கொரோனா தோற்று உறுதியானதாக சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இவரைத் தொடர்ந்து கேப்ரில்லாவிற்கு ஜோடியாக நடனமாடிய அஜித்துக்கும் தற்பொழுது  கொரோனா பாஸ்டிவ் வந்துள்ளது.

இவர்களைத் தொடர்ந்து 3-வது நபராக நடிகர் சென்ராயன் கொரோனா உறுதியானதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  இவ்வாறு விஜய் டிவி தங்களது டிஆர்பியை ஏற்ற வேண்டும் என்பதற்காக உயிருடன் விளையாடி வருகிறார்கள்.  எனவே தற்போது பெரும் சர்ச்சை ஏற்பட்டு வருகிறது. பலர் விஜய் டிவியின் மீது கடும் கோபத்தில் இருந்து வருகிறார்கள்.

Leave a Comment