ஸ்ருதிக்காக வருணை எதிர்க்கும் தருண்.! சத்யா தான் முக்கியம் எனக்கு கூறும் வருண் மௌனராகம் 2 சீரியல் இந்த வார எபிசோட்.

பல வருடங்களாக தனது தந்தையை பிரிந்து வாழ்ந்து வரும் சத்தியா தற்போது பல பிரச்சனைகளுக்குப் பிறகு தனது அப்பாவை இவர் முன்பும் அப்பா என்று கூப்பிட்டு மகிழ்ச்சியாக இருந்து வருகிறார் இது பிடிக்காமல் பலரும் எதிராக இருந்து வருகிறார்கள். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான செய்திகள் ஒன்றுதான் மௌனராகம் 2.

கார்த்திக் கிருஷ்ணா மல்லிகாவுடன் திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது அவர்தான் சத்தியா. சில பிரச்சனைகளால் சென்னைக்கு சென்ற இவர் அங்கு காதாம்ரியின் சூழ்ச்சியினால் அவரை திருமணம் செய்து கொள்ளும் நிலைமை ஏற்பட்டது.

இதன் காரணமாக கார்த்தி கிருஷ்ணன் அவர்களுடன் வாழ்ந்து வர மல்லிகா மற்றும் சத்யா இருவரும் தனியாக வாழ்ந்து வந்தனர் பிறகு மீண்டும் கார்த்திக்குடன் இணைந்தனர் அதன் பிறகு சில பிரச்சனைகளால் அவர்களை விட்டு தனியாக வந்து மல்லிகாவும் சத்யாவும் ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்தார்கள் இதுதான் முதல் எபிசோடில் நடந்தது.

இரண்டாவது எபிசோடில் ஸ்ருதி மற்றும் சத்யா இருவரும் வளர்ந்து ஒரே வீட்டில் மருமகள்களாக வாழ்ந்து வந்தனர் பிறகு சத்யா தான் தனது மகள் என்பதை கார்த்தி கிருஷ்ணா அறிந்து கொண்டார். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது சில பிரச்சனைகளால் தனது அம்மாவுடன் வாழ்ந்து வந்த சத்யாவை தனது வீட்டிற்கு அழைத்து வரவேண்டும் என வருண் பல முயற்சிகளை செய்து வந்த நிலையில் தற்போது பாடல் பாடி ஜெயிச்ச நிலையில் சத்யாவை அழைத்து வரும் மகிழ்ச்சியில் அனைவரும் இருந்தனர்.

இந்த நேரத்தில் காதம்பரி ரவுடிகளை வைத்து சத்யாவை கொலை செய்ய முயற்சித்த நிலையில் அதனை பார்த்த கார்த்திக் கிருஷ்ணா தனது அந்த கத்தி குத்தை வாங்கிக் கொண்டார் தற்பொழுது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் தற்பொழுது கண் விழித்துள்ளார்.

விழித்தவுடன் அப்பா என கூப்பிட மகிழ்ச்சியடைந்த கார்த்திக் கிருஷ்ணா இன்னொரு முறை கூறு என கேட்கிறார் பிறகு எனது மகள் என்னுடன் இருக்கும் பொழுது எனக்கு என்ன கவலை என்று கூறி கொண்டிருக்கிறார் பக்கத்தில் இன்று ஸ்ருதியை கண்டு கொள்ளாததால் அழுது கொண்டே வெளியில் சென்று விடுகிறார்.

இதனை தொடர்ந்து காதம்பரி வர நீங்கள் இங்கு வந்ததால்தான் இவ்வளவு பிரச்சனை எனக் கூற நான் வந்ததனால் தான் சத்யாவை காப்பாற்ற முடிந்தது என கூறுகிறார் பிறகு மல்லிகாவிடம் சண்டை போட மல்லிகா காளமாடியை வாயை மூடு என சொல்லி சண்டை போடுகிறார்.

இவ்வாறு போய்க்கொண்டிருக்கும் நிலையில் தருண் சத்யாவில் குடும்பத்தில் இருப்பவர்கள் இங்கு அதிகமாக ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். ஸ்ருதியை கார்த்திக் அங்குள் கண்டுகொள்ளவே இல்லை ஸ்ருதியும் அவருடைய மகள்தானே கேட்கிறார் பிறகு வருனுடன் வாக்குவாதத்திலே ஈடுபடுகிறார். பிறகு வருண் தற்பொழுது தான் சத்யா எனது காதலை ஏற்றுக் கொண்டுள்ளார் அதற்காக தற்போது நான் என்ன வேணாலும் செய்வேன் எனக் கூறுகிறார்.இவ்வாறு பார்த்தால் இந்த விஷயத்தில் ஸ்ருதிக்கு துணையாக இருந்து வருனை தருண் எதிர்பார்ப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment