ஸ்ருதி செய்த சதி திட்டத்தால் வீட்டை விட்டு வெளியேறும் சக்தி.! அதிர்ச்சியில் ரசிகர்கள்.

விஜய் தொலைக்காட்சியில் மிக நீண்டகாலமாக ஒளிபரப்பப்பட்டு வரும் ஒரு நாடகம்தான் மௌனராகம் இந்த நாடகத்தின் முதல் பாகம் ரசிகர்களால் மிகவும் விரும்பப்பட்டது, தற்பொழுது வெளியாகி வரும் மௌனராகம் நாடகத்தின் இரண்டாம் பாகமும் ரசிகர்களால் மிகவும் விரும்பப்படுகிறது.

இதன் முதல் பாகம் ஒரு திரைப்பட கதையைப் போன்றது, ஏனென்றால் முதல் பாகத்தில் அவ்வளவு டுவிஸ்ட் இருக்கும். இந்த நாடகத்தில் கார்த்தி கிருஷ்ணாவிற்கு இரண்டு மனைவிகள் ஒருவர் மல்லிகா இன்னொருவர் காதம்பரி இவர்கள் இருவருக்கும் பெண் குழந்தைகள் உண்டு அதில் மல்லிகா குழந்தையின் பெயர் சக்தி மற்றும் காதம்பரி குழந்தையின் பெயர் ஸ்ருதி,இதில் மல்லிகா கார்த்தியின் ரகசிய மனைவியாவார்.

தற்போது இரண்டாம் பாகத்தில் மல்லிகாவின் மகள் சத்யா வருண் என்பவரை திருமணம் செய்து கொள்கிறார் மேலும் சுருதி தருண் என்பவரை திருமணம் செய்து கொள்கிறார். சத்தியா மல்லிகாவின் மகள் என்று எவருக்கும் தெரியாத நிலையில் அதை சுருதி மட்டும் தெரிந்து கொள்கிறாள்.

இதையடுத்து சத்யாவிடம் ஸ்ருதி நான் உன்னை வருணிடமிருந்து பிரித்தே தீருவேன் என்று சபதம் எடுத்தாள். சமீபத்தில் தற்போது வெளியான மௌனராகத்தின் ப்ரோமோவில் வருண் மயங்கி விழுந்துவிடுகிறார், இதன்பிறகு சத்தியா வருணை பார்ப்பதற்காக மருத்துவமனை செல்கிறார்.

அங்கு வருண் வெளியே செல் எனக்கு உன்னை பார்க்க இஷ்டமில்லை,துரோகம் செய்த உன்னை பார்க்கமாட்டேன் என்று சத்தமாக அங்கிருக்கும் அனைவருக்கும் கேட்கும்படி கூறுகிறார், ஏன் இப்படி கூறுகிறார் என்று தெரியாமல் அழுதபடி நிற்கும் சத்தியாவிடம், “” நான் வருண் கிட்ட நீ தருண லவ் பண்ணுனதா சொன்ன அதனால தான் வருண் இப்படி திட்டுறான், நான்தான் உன்கிட்ட முன்னாடியே சொல்லியிருந்தல்ல உன்னை இந்த வீட்டை விட்டு வெளியே அனுப்புவன்னு இனிமே வருணே போக சொல்வாரு “”அப்படின்னு சொல்லுறா.

பிறகு சத்யா தனது மாமனாரிடம் இதற்கு மேல் நான் இந்த வீட்டில் இருக்க மாட்டேன் எனக் கூறிவிட்டு வருணிடம் எனது உண்மையான அன்பு உங்களுக்கு பொய்யாக தெரிகிறதா என்று கூறி அழுகிறாள். இந்த வீடியோ ரசிகர்களிடையே என்னதான் நடக்கும் என்னும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment