சத்யாவை வீட்டிற்கு கூட்டிட்டு போக சொன்ன மல்லிகாவின் அண்ணன்.! கடைசியில் வைத்த டுவிஸ்ட்..

விஜய் டிவியில் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்தான் மௌனராகம் 2.  இந்த சீரியல் அறிமுகமான சில கட்டத்திலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று டிஆர்பி-யில் முன்னணி வகித்து வருகிறது.

இந்நிலையில் தற்பொழுது சத்யா வருணன் வீட்டை விட்டு வந்த நிலையில் தனது அம்மா மல்லிகாவுடன் இருந்து வருகிறார்.  எப்படியாவது சத்யாவை தனது வீட்டிற்கு அழைத்துட்டு போய்விட வேண்டும் என்பதற்காக வருண் பல முயற்சிகளை செய்து வருகிறான்.

இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் சத்யாவின் மனதை மாற்ற வேண்டும் என்பதற்காக வருண் கோவிலில் பரிகாரம் போகிறார் அங்கு கையில் விளக்கை வைத்து கோவிலை 3 முறை சுற்றி வருமாறு பூசாரி கூறுகிறார்.  நெருப்பைப் பார்த்ததும் வருணுக்கு ஏதோ ஆக பிறகு சத்தியா, தருண், ஸ்ருதி ஆகியோர்கள் வந்து வருணை சமாதன படுத்துகிறார்கள்.

தருண் மற்றும் ஸ்ருதி வீட்டிற்கு வருமாறு வருணை கூப்பிட வர முடியாது என்று கூறிவிடுகிறார்.  பிறகு வருணின் அத்தை மற்றும் ஸ்ருதி இருவரும் மல்லிகா மற்றும் சத்யாவை சந்தித்து வருணிற்கு என்ன குறை  கோடி கோடியா பணம் இருக்கு,  நினைத்த இடத்துக்கு எல்லாம் போகலாம் சத்யாவிற்கு பாட்டு படம் மட்டும்தான் தெரியும் என மிகவும் கோபமாக கூறுகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் சத்யாவின் மாமா வருணை தலையில் கொட்டிவிட்டு சத்யாவை உங்க அத்தை பாட்டு படம் மட்டும்தான் தெரியும் வேற என்ன தெரியும் என சொல்றாங்க எனவே நீ ஒழுங்கா பாட்டு பாடிட்டு சத்யாவை கூட்டிட்டு போ என்று கூறிவிடுகிறார்.இதன் காரணமாக வருண் பாட்டு பாடி  கற்றுக் கொள்வதற்கு  தருண் உதவி செய்கிறார் இதுதான் இன்றைய எபிசோடு ஒளிபரப்பாக இருக்கிறது.

Leave a Comment