கையில் விளக்கேற்றி கோவிலை மூன்று முறை சுற்றி வேண்டுதல் செய்யவுள்ள வருண்.! பதறியடித்து ஓடும் சத்யா..

சின்னத்திரையில் முக்கிய தொலைக்காட்சியாக வளம் வந்து கொண்டிருப்பதுதான் விஜய் டிவி. தொடர்ந்து பல தொலைக்காட்சிகள் ஏராளமான சீரியல்களை ஒளிபரப்பி வந்தாலும் விஜய் டிவி அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் எந்த தொலைக்காட்சிகளும் பிரபலமடையவில்லை என்றுதான் கூற வேண்டும்.

ஏனென்றால் விஜய் டிவி தொடர்ந்து வித்தியாசமான கதை உள்ள மிகவும் சுவாரசியமாக இருக்கும் வகையில் சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் ஒரு சில சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்ற மிகப் பெரிய வெற்றியை பெற்று விட்டால் அதனை இரண்டாவது,மூன்றாவது சீசன் ஒளிபரப்புவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அந்த வகையில் ஒரு சீரியல் தான் மௌனராகம். இந்த சீரியலில் வெள்ளித்திரையில் நடித்த ஏராளமான கேரக்டர்கள் நடித்து வருகிறார்கள். மேலும் முதல் சீசன் வெற்றிகரமாக முடிந்த நிலையில் இரண்டாவது சீசன் அறிமுகமான சில காலகட்டத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து டிஆர்பி-யில் முன்னணி வகித்து வருகிறது.

ஒரே வீட்டில் மருமகளாக ஸ்ருதி மற்றும் சத்யா வாழ்ந்து வருகிறார்கள். சத்யாவை எப்படியாவது வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்பதற்காக பல சதித் திட்டங்களை தீட்டி சுருதி சத்யாவை வீட்டைவிட்டு வெளியேற்றினார். ஒரு கட்டத்திற்கு மேல் கோபமடைந்து சத்தியா எனது அப்பா கார்த்திக் தான் அம்மா மல்லிகா என்று கூற அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

என்னை நம்பாத வீட்டில் இதற்கு மேல் நான் இருக்க மாட்டேன் என்று கூறிவிட்டு சத்யா தனது அம்மாவுடன் இருந்து வருகிறார். மல்லிகாவின் அண்ணன் மற்றும் அண்ணியை அழைத்துக் கொண்டு வருண் மல்லிகா மற்றும் சந்தியா இருக்கும் இடத்திற்கு சென்றான்.

அங்கு போயும் மல்லிகா வருணை ஏற்றுக் கொள்ளாத காரணத்தினால் எப்படியாவது அனைத்து பிரச்சனைகளையும் சரிசெய்து சத்யாவை தன்னுடன் அழைத்து கொண்டு வீட்டிற்கு செல்ல வேண்டும் என வருண் ஒரு முடிவுடன் இருந்து வருகிறான்.

இப்படிப்பட்ட நிலையில் உண்ண உணவும் இருக்க இடமும் இல்லாத காரணத்தினால் காரிலேயே தங்கிக் கொண்டு சந்தியா பணியாற்றிவரும் தேயிலைத் தோட்டத்தில் வருண் பணியாற்றி வருகிறார்.  இப்படிப்பட்ட நிலையில் இன்று வெளியாகியுள்ள எபிசோடில் கோவிலுக்கு சொல்ல போவதாக கூறி விட்டு வருண் செல்லும் வழியில் ஒருவர் வருகிறார் அவரிடம் வேண்டுதல் எப்படி செய்ய வேண்டும் என்று கேட்க அவர் விளக்கை ஏற்றிவிட்டு கையில் எடுத்துக்கொண்டு அது அணையாமல் மூன்று முறை கோவிலை சுற்றி வர வேண்டும் என்று கூறுகிறார்.

அதனை நான் செய்துவிடுவேன் என்று கூறிவிட்டு வருண் கோவிலுக்கு செல்கிறார். பிறகு இதனை தெரிந்துகொண்ட சத்யா கோவிலுக்கு வேகமாக ஓடுகிறார்.  அதற்குள் வருண் கையில் விளக்கை ஏற்றி வைத்து விடுகிறார் பூசாரி. மேலும் வருணுக்கு இதற்கு மேல் என்ன ஆகும் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Leave a Comment