சத்யாவை கடத்த வந்த ரவுடிகள்.! காப்பாற்றப் போய் கத்தியால் குத்து வாங்கிய வருண்..

விஜய் டிவியில் தொடர்ந்து ஏராளமான சீரியல்களை ஒளிபரப்பாகிய ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. அதோட சில சீரியல்கள் மிகப்பெரிய வெற்றி பெற்று விட்டால் அதனை இரண்டாவது சீசன் ஒளிபரப்புவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அந்த வகையில் முதல் சீசனை தொடர்ந்து 2வது சீசனும் அறிமுகமான சில கால கட்டத்திலேயே டிஆர்பி-யில் முன்னணி வகித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ள சீரியல் தான் மௌனராகம். இந்த சீரியலில் தற்பொழுது தொடர்ந்து ஏராளமான திருப்பங்களுடன் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.

முதல் சீசனில் இருந்தது போலவே ஸ்ருதி வில்லி கேரக்டரிலும், சத்தியா பாசிடிவ் கேரக்டரிலும் நடித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் அண்ணன் தம்பிகளை திருமணம் செய்து கொண்டு ஒரே வீட்டில் மருமகள் களாக வாழ்ந்து வருகின்றனர்.

சத்யாவை எப்படியாவது வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என பால திட்டங்களை போட்டு வருணையும் சத்யாவையும் பிரித்து சத்யாவை வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். எனவே தற்பொழுது சத்யா தனது அம்மாவுடன் இருந்து வரும் நிலைகள் சத்யாவை தேடி வருண் அவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்றுள்ளார்.

எப்படியாவது சத்யாவை அழைத்துக் கொண்டு தான் வீட்டிற்கு போக வேண்டும் என்ற முடிவில் வருண் இருந்துவரும் நிலையில் தங்குவதற்கு வீடு இல்லாமல் காரிலேயே தங்கி வருகிறார்.  மேலும் சாப்பிடுவதற்கு பணமில்லாத காரணத்தினால் சத்தியா வேலை செய்து வரும் தேயிலை தோட்டத்தில் வருணும் வேலை செய்து வருகிறான்.

இப்படிப்பட்ட நிலையில் ருக்மணி சத்யாவை கடத்துவதற்காக ரவுடியை அனுப்ப சத்யாவை கடத்தும் நேரத்தில் வருண் அதனை பார்த்து விடுகிறான்.  பிறகு சத்யாவை காப்பாற்றப் போகும் பொழுது அந்த ரவுடி வருணின் கையில் கத்தியால் கிழித்து விடுகிறான்.

பிறகு கட்டையால் அடித்து சத்யாவை காப்பாத்த அந்த ரவுடி ஓடிவிடுகிறான்.  இந்நிலையில்  சத்யாவிடம் நான் அந்த நோட்டீஸ் அனுப்ப வில்லை உனக்கு தெரிந்த பிறகுதான் எனக்கே தெரியும் என்று வருண் கூறுகிறார் இதுதான் இன்றைய எபிசோடு ஒளிபரப்பாக இருக்கிறது.

Leave a Comment