ரோட்டில் கார்த்திக் கிருஷ்ணாவை வெளுத்து வாங்கிய சத்தியா.! இனிவரும் எபிசோட்.

விஜய் டிவியில் தொடர்ந்து சில சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவதால் இரண்டாவது சீசனையும்  ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் கடந்த ஆண்டு அறிமுகமாகி தற்போது டிஆர்பி-யில் முன்னணி வகித்து வரும் சீரியல்தான் மௌனராகம் 2.

இந்த சீரியல் முதல் பாகத்தில் குழந்தை நட்சத்திரங்களாக நடித்த வந்த சக்தி மற்றும் சுருதி தற்போது வளர்ந்து ஒரே வீட்டில் மருமகளாக வாழ்ந்து வருகிறார்கள். அங்கு சத்யாவிற்கு எப்படி எல்லாம் சுருதியை பிரச்சனை தருகிறார் என்பதை மையமாக வைத்துதான் இந்த சீரியலின் கதை போய்க்கொண்டிருக்கிறது.

சத்யா தான் சக்தி என்பதை அறிந்துகொண்ட ஸ்ருதி வீட்டிலிருந்து சத்யாவை வெளியேற்றுவதற்காக பல திட்டங்களை போட்டார். அந்த வகையில் வருணிடம்  போய் திருமணத்திற்கு முன்பு சத்யா மற்றும் தருண் இருவரும் காதலித்தார்கள் எனவே சத்யாவிற்கு தருண் என்னை இப்பொழுது வேண்டாம் எனக் கூறுகிறார் என்று அழுது நடிக்கிறாள்.

இதனை நம்பிய வருண் சத்யா மீது மிகவும் கோபமடைந்த வருகிறான்.  அந்த நேரத்தில் வருணின் அத்தை வேலைக்காரியை வைத்து கரண்டை ஆஃப் செய்துவிட்டு மெழுகுவர்த்தி ஏற்றி வருணின் ரூமில் வைக்க வேண்டும் என கூறுகிறார் அதனை அப்படியே செய்கிறாள்  வேலைக்காரி. பிறகு அந்த நெருப்பினை  பார்த்ததும் வருண் கத்தி அழுது மயங்கி விழுந்து விடுகிறான்.

பிறகு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சரி செய்து மீண்டும் வீட்டிற்கு அழைத்து வருகிறார்கள். அப்பொழுது சத்தியா பேச முயற்சிக்கிறாள் ஆனால் வருண் எப்படி தம்பியை காதலித்துவிட்டு அண்ணனை திருமணம் செய்துகொள்ள உனக்கு மனசு வந்தது எனக்கூறி கத்துகிறான்.

பிறகு சத்தியா என்னை சந்தேகப்படும் வீட்டில் நான் இருக்க மாட்டேன் என்று கூறிவிட்டு பையை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்து விடுகிறான் சத்தியா  ரோட்டில் நடந்து செல்வதை பார்த்த அவளின் அப்பா வந்து காரில் ஏறு எனக்கூற சத்யா எல்லாம் உங்களால்தான் எனக்கூறி மிகவும் ஆக்ரோஷமாக கத்துகிறாள்.  அந்த ப்ரோமோ தான் சமீபத்தில் வெளிவந்துள்ளது.

Leave a Comment