உண்மையை கண்டுபிடித்த வருண்.. வசமாக சிக்கிக்கொண்ட ஸ்ருதி.! இனிவரும் எபிசோட்.

விஜய் தொலைக்காட்சியில் பலகாலமாக ஒளிபரப்பப்பட்டு வரும் ஒரு அழகான நாடகம்தான் மௌன ராகம், இந்த நாடகத்தின் முதல் பாகம் ரசிகர்களால் மிகவும் விரும்பப்பட்டது, தற்பொழுது வெளியாகி வரும் மௌனராகம் நாடகத்தின் இரண்டாம் பாகமும் ரசிகர்களால் மிகவும் விரும்பப்படுகிறது.

இந்த நாடகத்தில் கார்த்தி கிருஷ்ணாவிற்கு இரண்டு மனைவிகள் ஒருவரின் பெயர் மல்லிகா இன்னொருவரின் பெயர் ககாதம்பரி ஆகும்.
தருண் என்பவர் சத்யாவை காதலித்து வந்த நிலையில் தருணின் அண்ணன் வருண் சத்யாவை திருமணம் செய்து கொண்டார், இதை வைத்து ஸ்ருதி தருனை மிரட்டி அவர் திருமணம் செய்துகொண்டார்.

சத்யாவை அனைவரும் கொண்டாடுவதால் ஏன் அனைவரும் இப்படி செய்கிறார்கள் என்று குழப்பத்தில் இருந்த ஸ்ருதிக்கு சத்தியா மல்லிகாவின் மகள் சக்திதான் என்ற உண்மை தெரிந்தது.அதன் பிறகு பல விஷயங்கள் நடந்து நாடகம் மிகவும் விறுவிறுப்பாகச் சென்றுக்கொண்டிருந்த நிலையில், ஸ்ருதி, ஷீலாவுடன் இணைந்து வருண் மற்றும் சத்யாவை பிரிக்க வேண்டும் என்று எண்ணினார் அதேபோல் பிரித்து வெற்றியும் கண்டார்.

வீட்டை விட்டு வெளியே சென்ற சத்தியாவுக்கு டிஜிபி அடைக்கலம் கொடுத்தார். இதற்கு காரணம் தருணும் சத்யாவும் ஒருவருக்கு ஒருவர் காதலித்து வந்தனர் என்று நினைத்துக்கொண்டார் வருண் ஆனால் உண்மையில் தருண் சத்யாவை காதலித்தது சத்யாவிற்கே தெரியாது என்பதுதான். ஆரம்பத்திலேயே இப்படி ஒரு பிரச்சினை வந்துவிடக்கூடாது என்பதனால்தான் தருண் சுருதி சொல்வதையெல்லாம் கைகட்டி கேட்டுக்கொண்டு வந்தார். வரும் அப்படி நினைத்ததற்கு காரணம் சுருதி வருணிடம், தருணும் சத்யாவும் கல்யாணத்திற்கு முன்பு காதலித்து வந்தார்கள் என்று கூறியதுதான்.

இப்படி சென்று கொண்டிருக்க தற்போது வெளியான ப்ரோமோவில் வருண் தருணிடம் இதுபற்றி கேட்டுவிட்டு தனது அப்பாவிடம் நான் சென்று சத்யாவை அழைத்து வருகிறேன் என்று ஆனந்தத்துடன் கூறுகிறார். அதற்கு அவரது தந்தை அப்படியா என்று ஆச்சரியத்துடன் கேட்டு சரி என்று கூறுகிறார். வருணும் சத்யாவும் மீண்டும் சந்தோஷமாக இணையும் காட்சியை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

Leave a Comment