சத்யாவிற்கு டிவோர்ஸ் பேப்பரை அனுப்பி வைத்த தருணின் அத்தை.! ஆத்திரத்தில் வருண்..

பொதுவாக அனைத்து தொலைக்காட்சிகளும் முதல் சீசன் நல்ல வரவேற்ப்பை பெற்று விட்டால் அதனை இரண்டாவது சீசன் ஒளிபரப்புவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் முதல் சீசன் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாவது சீசனும் அறிமுகமான சில காலகட்டத்திலேயே நல்ல வரவேற்பினை பெற்று டிஆர்பி-யில் முன்னணி வகித்து வரும் சீரியல் தான் மௌனராகம் 2.

இந்த சீரியலில் முதல் சீசனில் குழந்தைகளாக நடித்து வந்த ஸ்ருதி மற்றும் சக்தி இருவரும் வளர்ந்து ஒரே வீட்டில் மருமகள்களாக வாழ்ந்து வருகின்றனர். சுருதி எப்படியாவது சத்யாவை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என பல திட்டங்களைப் போட்டு வெளியேற்றினாள்.

பிறகு குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சத்யா தான் கார்த்திக்கின் முதல் மகள் என்ற மல்லிகா அவரின் முதல் மனைவி என்றும் தெரியவந்துள்ளது.  இதன் காரணமாக தற்போது சத்யா மற்றும் மல்லிகா இருவரும் ஒன்றாக இருந்து வரும் நிலையில் வருண் சத்யாவின் மாமா மற்றும் அத்தை சந்தித்து அவர் நெருக்கமாக பழகி வருகிறான்.

பிறகு இவர்களை அழைத்துக்கொண்டு சத்யாவை சந்திப்பதற்காக செல்கிறான் அங்கு போன பிறகு மல்லிகா தனது அண்ணன், அண்ணியை பார்த்து விட்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறாள்.  பிறகு வருணிடம் டிவோர்ஸ் பேபரை பற்றி கூற சத்யாவின் மாமா வருணை அடித்து துரத்துகிறார்.

உடனே வருண் தருணிற்கு போன் செய்து ஏன் நான் நல்லா இருக்கிறது உங்களுக்கு பிடிக்கலையா எனது வாழ்க்கை வீணாகும் நினைக்கிறீர்களா என்று கூற தருண் உடனே தனது அப்பாவிடம் இதனைப் பற்றி கூறுகிறான். பிறகு தருணின் அப்பா தனது தங்கையை பிடித்து திட்டுகிறான் மேலும் இதேபோல் மீண்டும் செய்தால் வீட்டை விட்டு வெளியே போய்விடு என்று கூறிவிட்டான் இதுதான் இன்றைய ப்ரோமோவில் வெளியாகியுள்ளது.

Leave a Comment