கார்த்திக் கிருஷ்ணாவை சென்னைக்கு அழைத்துச் செல்வதற்காக நல்லவள் போல் நடித்து காய் நகர்த்திய ஸ்ருதி.! ஆனால் கார்த்திக் கிருஷ்ணா வைத்த டுவிஸ்ட்..

தமிழ் சின்னத்திரையில் முக்கியமான தொலைக்காட்சிகள் ஒன்றாக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் டிவி தொடர்ந்து பல சுவாரசியமான சீரியல்கள் ஒளிபரப்புவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் அந்த வகையில் தற்பொழுது மிகவும் சுவாரசியமாக ஒளிபரப்பாகி வரும் தொலைக்காட்சி தான் மௌன ராகம் 2.

இந்த சீரியலில் தற்பொழுது கார்த்திக் மல்லிகா மற்றும் சத்யாவுடன் வாழ்ந்து வருவதால் காதம்பரி மற்றும் சுருதி இவர்களின் மீது கடும் கோபத்தில் உள்ளார்கள் மேலும் காதம்பரி கார்த்திக் வராத காரணத்தினால் அவர் மல்லிகா உடனே இறந்து விடுவாரோ என்ற பயத்தில் பைத்தியம் போல் நடந்து கொள்கிறார் எனவே காதம்பரியின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்து வருவதால் அவரை சரி செய்ய வேண்டும் என்பதற்காக தற்பொழுது கார்த்திக்கை சென்னை அழைத்துச் செல்ல வேண்டும் என்பதற்காக சுருதி வந்துள்ளார்.

சுருதி,மல்லிகா மற்றும் சத்யாவுடன் மிகவும் பாசமாகவும்,பணிவுடன் பேசியதால் அவர்கள் நம்பி விடுகிறார்கள். காதம்பரிக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் ஸ்ருதி சத்தியா, மல்லிகாவிடம் நடித்து வருகிறார் என்பது இன்றைய எபிசோடில் தெரியவரும். இந்நிலையில் மல்லிகா,சத்யா இருவரும் கார்த்திக் கிருஷ்ணாவிடம் பேசி தற்போது சென்னைக்கு செல்ல முடிவெடுத்துள்ளார்கள்.

கார்த்திக் என்னால் அங்கேயே இருக்க முடியாது எனக் கூறுகிறார் மேலும் சத்தியா உங்களுக்கு நான் உத்தரவாதம் தருகிறேன் எப்படியாவது உங்களை இரண்டு நாளில் மறுபடியும் அழைத்து வந்து விடுகிறேன் எனக் கூறுகிறார். பிறகு கார்த்தியும் உனக்காகவும் சத்யாவுக்காகவும் செல்கிறேன் என கூறுகிறார். ஆனால் நான் சந்தோஷமாக இருக்கும் நாட்கள் இதுதான் எனக் கூறுகிறார்,

பிறகு தருண்,ஸ்ருதி இருவரையும் வரவைத்து பேசும்பொழுது அனைவரும் சுருதி மற்றும் காதாம்பரி இருவரையும் திட்டுவது போல் பேசுகிறார்கள். இதனால் அமைதியாக இருந்த சுருதி கார்த்தி சென்னைக்கு வர அனுமதி தெரிந்ததும் சத்யாவை தனியாக சந்தித்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது சத்யாவுக்கு தெரியாமல் வில்லி போல் முறைக்கிறார்.

பிறகு தருணிடம் சுருதி அவர் என்னுடைய அப்பா எனக்கு எந்த உரிமையும் இல்லையா அவர் இதற்கு மேல் இந்த வரவிடமாட்டார் சென்னையில் எங்களுடன் தான் இருப்பாரு என கூறுகிறார் இதோடு இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Leave a Comment