மனோகரிடம் ஸ்ருதியை வசமாக சிக்கிவிட்ட சொர்ணம்.! கடும் கோபத்தில் தருண்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் மௌன ராகம் 2. இந்த சீரியலில் கார்த்தி கிருஷ்ணாவிற்கு கத்தி குத்து ஏற்பட்ட நிலையில் மல்லிகா மற்றும் சத்தியா அவர்களுடன் வாழ்ந்து வந்தார்.

இப்படிப்பட்ட நிலையில் காதம்பரிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கார்த்திக் கிருஷ்ணா சென்னைக்கு வந்துள்ளார். மேலும் மனோகரிடம் சத்தியா அந்த ரவுடிகளை பற்றி கூறிய நிலையில் மனோகரம் போலீசார்களிடம் அனைத்து விவரங்களையும் கூறி தற்பொழுது ரவுடிகள் வசமாக சிக்கிக் கொண்டார்கள்.

மேலும் ரௌடிகளை அடித்து கேட்ட பொழுது நாங்கள் சத்யாவை தான் கொள்வதற்காக வந்தோம் ஆனால் கார்த்திக் கிருஷ்ணா இடையில் வந்து விட்டார் எனக் கூறிய பிறகு யார் இவ்வாறு உங்களை செய்ய சொன்னது என்று கேட்டதும் அவர்கள் காதம்பரி மற்றும் அவருடைய அம்மாவை மாட்டி விடுகிறார்கள் பிறகு போலீசார்கள் காதம்பரி மற்றும் அவரை அம்மாவை கைது செய்து விடுகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் மல்லிகா சென்னைக்கு வந்துள்ள நிலையில் அவர் தனது வீட்டிற்க்கே போவதாக கூறுகிறார் ஆனால் சத்தியா கார்த்திக் கிருஷ்ணா என அனைவரும் மல்லிகாவிடம் இதற்கு மேல் இதுதான் உன்னுடைய வீடு என சொல்லி இருக்க வைக்கிறார்கள்.ஆனால் மல்லிகாவிற்கு பிடிக்கவில்லை மேலும் மனோகர் ஸ்ருதியிடம் உன்னுடைய அம்மா மற்றும் பாட்டியை பார்ப்பதற்காக போகக்கூடாது என கூறியிருந்த நிலையில் யாருக்கும் தெரியாமல் ஸ்ருதி அவர்களை பார்த்து வருகிறார்.

இதனை எப்படியோ தெரிந்து கொண்ட சொர்ணம் மனோகரிடம் போட்டு விடுகிறார். மனோகர் எப்படி என் பேச்சை மீறி நீ போகலாம் என கூற தருணம் சேர்ந்து சத்தம் போடுகிறார். இவ்வாறு இருவரும் திட்ட ஸ்ருதி அப்படியே அமைதியாக அழுதுக்கொண்டு நிற்கிறார்.

Leave a Comment