வருண்,சதயாவிற்கு எதிரியாக மாறும் தருண்.! எல்லாத்திற்கும் நீ தான் காரணம் என தனது அம்மாவை திட்டும் காதாம்பரி..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் மௌனராகம் 2. கத்தி குத்து ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கார்த்திக் கிருஷ்ணா தற்பொழுது உடல்நலம் சரியானதால் மல்லிகா மற்றும் சத்யாவுடன் இருந்து வருகிறார்.

ஆனால் காதம்பரி எப்படியாவது கார்த்திக் கிருஷ்ணாவை சென்னைக்கு அழைத்து சென்றுவிட வேண்டும் என நினைத்த நிலையில் கார்த்திக் கிருஷ்ணா வராததால் கடும் கோபத்தில் இருந்து வருகிறார். ஆனால் கார்த்திக் கிருஷ்ணா சத்யா வருண் மற்றும் தனது மனைவி மல்லிகாவுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார்.

வருண் கார்த்திக் கிருஷ்ணாவை தனது அப்பா போல் மிகவும் நன்றாக பார்த்துக் கொள்கிறார். இதன் காரணமாக இதனைப் பார்த்த மல்லிகாவின் அண்ணன் மிகவும் மகிழ்ச்சியடைகிறார் உன்னையும் சத்யாவை பிரித்து வைத்ததற்கு என்னை மன்னித்துவிடு என கூறி கட்டியணைத்து அழைக்கிறார்.

தொடர்ந்து தற்பொழுது வெளியாகி உள்ள எபிசோடில் வருண் மற்றும் சத்யா இருவரும் வெகு நாட்கள் கழித்து மிகவும் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து கார்த்திக் கிருஷ்ணாவை மல்லிகாவின் அண்ணன் சென்னைக்கு போனதும் மல்லிகாவையும் சத்யாவையும் மறந்துவிடுவார்கள் என பெறுகிறார்.

பிறகு சென்னையில் இருக்கும் காதம்பரி கார்த்திக் கிருஷ்ணா வீட்டுக்கு வராத காரணத்தினால் மிகவும் கோபம் அடைகிறார் மேலும் தனது அம்மாவிடம் இதற்கு எல்லாம் நீதான் காரணம் எனக்கொரு சண்டை போட்டுக்கொண்டு இருக்கிறார். இதனைத் தொடர்ந்து ஸ்ருதி மிகவும் சோகமாக இருந்து வருவதாலும் தனது அப்பாவை நினைத்து வருவதால் தருண் வருண் மற்றும் சத்யாவின் மிகவும் கோபமாக இருக்கிறார் இனி வரும் எபிசோடுகளில் தருண் வருண் சத்யாவிற்கு இருப்பார் என தெரிய வருகிறது.

Leave a Comment