கார்த்திகை தனது அப்பாப் போல் பார்த்துக்கொள்ளும் வருண்.! மல்லிகாவின் அண்ணன் செய்த செயல்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றுதான் மௌனராகம் 2 இந்த சீரியல் முதல் பாகம் வெற்றி பெற்ற நிலையில் தற்போது இரண்டாவது பாகத்தினையும் அறிமுகப்படுத்தி டிஆர்பி-யில் பெற வைத்துள்ளார்கள் .இந்த சீரியலில் நடித்து வரும் அனைத்து கேரக்டர்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தற்பொழுது ஸ்ருதி மற்றும் சத்யா இருவரும் வளர்ந்து ஒரே வீட்டில் மருமகள்களாக வாழ்ந்து வருகிறார்கள்.

சமீபத்தில் சத்யாவை கொள்வதற்காக காதம்பரி மற்றும் அவருடைய அம்மா திட்டம் போட்டிருந்த நிலையில் அந்த ரவுடிகள் சத்யாவை குத்தும் நேரத்தில் அந்தக் கத்திக்கொத்தை கார்த்திக் கிருஷ்ணா வாங்கி கொள்கிறார் இதனால் கார்த்திக் கிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருந்த நிலையில் தற்போது தான் உடல்நிலை சரியாகி உள்ளது.

மேலும் இவரை சென்னைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என சஸ்ருதி மற்றும் காதம்பரி திட்டம் போட்ட நிலையில் மருத்துவர் நீண்ட தூரம் பயணம் செய்யக்கூடாது என்று கூறியதால் இதனை காரணமாக வைத்து கார்த்திக் கிருஷ்ணா வர முடியாது என கூறிவிட்டார்.

பிறகு தற்பொழுது மல்லிகா, சத்தியா மற்றும் மல்லிகாவின் அண்ணன் அண்ணி, வருண் என அனைவரும் ஒரே வீட்டில் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். கார்த்திக் கிருஷ்ணாவிற்கு முழுவதும் உடல்நலம் சரியாக வேண்டும் என்பதற்காக வருண் அவருக்கு தேவையான அனைத்தையும் செய்து வருகிறார்.

இப்படிப்பட்ட நேரத்தில் கார்த்திகிருஷ்னாவின் அம்மாவும் தற்போது வந்துள்ள நிலையில் அவர் மல்லிகாவிடம் மறுபடியும் கார்த்தி கிருஷ்ணாவுடன் பேச வேண்டும் என கூறி வருகிறார் எனவே மல்லிகா தாயகத்தில் இருந்து வருகிறார். இப்படிப்பட்ட நேரத்தில் மல்லிகாவின் அண்ணன் வருணை பார்த்து உங்களைப் பிடித்து வைத்ததற்கு என்னை மன்னித்து விடுங்கள் என கூறி கட்டி அணைத்து அழுகிறார் இதுதான் இன்றைய எபிசோடில் ஒளிபரப்பாக இருக்கிறது.

Leave a Comment