சத்யாவை மிஞ்சும் அளவிற்கு அருமையாக பாடிய வருண்.! உற்சாகத்தில் கார்த்திக் கிருஷ்ணனா.. மௌனராகம் சீரியலின் இன்றைய எபிசோட்.

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்பது வழக்கமாக இருந்து வருகிறது. மேலும் ஏராளமான சீரியல்கள் டிஆர்பி-யில் முன்னணி வகித்து வருகிறது அந்த வகையில் அறிமுகமான சில காலகட்டத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த சீரியல் தான் மௌன ராகம் 2.

இந்த சீரியலில் எப்படியாவது வருணையும், சத்யாவையும் பிரித்தி விட வேண்டும் என பல திட்டம் போட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தற்பொழுது சத்யா மல்லிகாவுடன் இருந்து வருகிறார்.  மேலும் சத்யாவை சென்னைக்கு அழைத்துப் போக வேண்டும் என்பதற்காக வருண் பல முயற்சிகளை செய்து வந்தார்.

இந்த நேரத்தில் வருணின் அத்தை மல்லிகா மற்றும் அவரின் அண்ணனிடம் சத்யாவிற்கு பாடம் மட்டும் தான் தெரியும் வேற ஒன்னும் தெரியாது என்று திட்டியதால் மல்லிகாவின் அண்ணன் வருணிடம் நீ ஒரு பாட்டை அழகாக முழுமையாக பாடி விட்டால் சத்யாவை அழைத்திட்டு போகலாம் என்று கூறுகிறார்.

இதனால் பாட்டு காத்துக் கொள்வதற்கு பல முயற்சிகளை செய்தும் வருணுக்கு பாட்டு பாட வரவில்லை பிறகு சென்னை திரும்புகிறார் இந்த நேரத்தில் சத்யா ஓடி வந்து போகாதீங்க என்று கூறுகிறார்.  இவ்வாறு போய்க்கொண்டிருக்கும் நிலையில் சத்யாவின் அப்பா கார்த்திக் கிருஷ்ணா வருணுக்கு பாட்டு சொல்லித் தருவதற்காக வருகிறார்.

பிறகு சொல்லித்தந்து தருவதற்காக பல முயற்சிகளை செய்தார்.  அந்த வகையில் இன்றைய எபிசோடு சத்யா மற்றும் வருண் இருவரும் சேர்ந்து பாட உள்ளார்கள். அதில் வருண் சத்யாவை மிஞ்சும் அளவிற்க்கு அழகாக பாடுகிறார்.  இதுதான் தற்பொழுது வெளியாகியுள்ள ப்ரோமோவில் தெரிய வருகிறது.

Leave a Comment