சத்யாவை பாட்டு பாட சொல்லி ரசிக்கும் கார்த்திக் கிருஷ்ணா.! உச்சகட்ட கோபத்தில் காதம்பரி,ஸ்ருதி..

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தற்போது மிகவும் விறுவிறுப்பாக பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் மௌன ராகம் 2. இந்த சீரியலில் நடித்து வரும் அனைத்து கேரக்டர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்த சீரியலில் சத்யாவை காப்பாற்றுவதற்காக கத்திக்குத்தை வாங்கிக்கொண்ட கார்த்திக் கிருஷ்ணா. இப்பொழுது எந்த பிரச்சனையும் இல்லாமல் உயிர் பிழைத்துள்ளார். கண் திறந்தவுடன் சத்யாயை பார்த்த இவர் அப்பா என கூப்பிட சத்யாவை மீண்டும் அப்பா என கூப்பிட சொல்லி ரசித்துக் கொண்டிருக்கிறார் எனது மகள் இருக்கும் பொழுது எனக்கு என்ன கவலை என கூற சுருதி கோபத்தில் அந்த இடத்தை விட்டு செல்கிறார்.

பிறகு காதம்பரி மல்லிகாவிடம் சண்டை போட இது எல்லாத்துக்கும் நீ மட்டும் தான் காரணம் எனக்கூறி காதம்பரியை வாயை மூட சொல்லுகிறார். பிறகு இதனை எல்லாம் பார்த்த தருண் வருனிடம் ஏன் இப்படி எல்லாம் செய்றாங்க சத்யாவின் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் அவர்களின் ஆதிக்கத்தை இங்கு செலுத்திக் கொண்டிருக்கிறார்கள் ஸ்ருதியும் கார்த்திக் சாரின் மகள்தானா எனக் கூறுகிறார்.

பிறகு அதனை போய் கார்த்திக் சாரிடம் கேளு என கூறிய பிறகு வருண் சத்யா இப்பொழுதுதான் அனைத்து பிரச்சனைகளையும் தாண்டி எனக்கு கிடச்சிருக்கா எனவே அவளுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன் எனக் கூறிவிடுகிறார். பிறகு போலீசார்கள் மருத்துவமனைக்கு வந்து ரவுடிகளைப் பற்றி கூற சத்தியா அவர்களைப் பற்றிய கரெக்டாக கூறுகிறார்.

இதன் காரணமாக காதம்பரி, ஸ்ருதி ஆகியவர்கள் பயப்படுகிறார்கள். இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் கார்த்தி கிருஷ்ணா சத்யாவை தனக்காக பாடல் பாட சொல்லி கேட்கிறார். சத்யா பாட இதனைப் பார்த்த சுருதி மற்றும் காதம்பரி கோபமடைகிறார்கள். இதனால் மேலும் பிரச்சனை உருவாகத் தான் போகிறது இதுதான் இந்த வாரம் எபிசோடில் ஒளிபரப்பாக இருக்கிறது.

Leave a Comment