ஸ்ருதியை மிரட்டிய சத்யா.! ஸ்ருதிக்கு உதவும் தருண்.. மௌனராகம் சீரியல் இன்றைய எபிசோட்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று தான் மௌனராகம் 2. இந்த சீரியலில் தற்பொழுது காதம்பரி மற்றும் அவருடைய அம்மா இருவரும் இணைந்து சத்யாவை கொள்வதற்காக ரவுடிகளை அனுப்பி வைத்திருந்த நிலையில் அந்த ரவுடிகள் சத்யாவை குத்தும் நேரத்தில் கார்த்திக் கிருஷ்ணா, சத்யாவை தள்ளிவிட்டு கத்திக்குத்தை தான் வாங்கிக் கொண்டார்.

தற்பொழுது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சுருதி காதம்பரிக்கு போன் செய்து நடந்ததை கூறுகிறார். உடனே காதம்பரி அழுது கொண்டே மருத்துவமனைக்கு தனது அம்மாவுடன் கிளம்புகிறார். இதனை தொடர்ந்து மருத்துவர் குடும்பத்தில் இருக்கும் ஒருவரை பார்க்க அழைத்த நிலையில் சுருதியும், சத்யாவும் ஒரே நேரத்தில் கிளம்புகிறார்கள்.

சுருதி சத்யாவை போகவிடாமல் வருண் மிரட்டி சத்யாவை அனுப்பி வைக்கிறார். மருத்துவர் உயிருக்கு எந்த பிரச்சனையும் இல்லையென்று கூற அனைவரும் மகிழ்ச்சியடைகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் ஸ்ருதி அழுது கொண்டே இருக்கும் நிலையில் தருண் சாப்பாடு வாங்கிட்டு வந்து ஸ்ருதிக்கு ஊட்டி விடுகிறார்.

பிறகு ஸ்ருதி அழுது கொண்டே தனது மனதில் இருப்பதை கூறி வருகிறார். இதனை தொடர்ந்து வருண், சத்யா, மல்லிகா ஆகியோர்கள் பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் சுருதி டாக்டரை பார்ப்பதற்காக வேக வேகமாக செல்கிறார். இதனைப் பார்த்த சத்யாவின் அத்தை எங்க போற என்று கேட்க டாக்டரை பார்க்க போறேன் என் அப்பாவை அழச்சிக்கிட்ட சென்னைக்கு போறேன் என்று கூறுகிறார்.

பிறகு வருண் என அனைவரும் அதெல்லாம் முடியாது என்று கூற சுருதி இந்த மருத்துவமனையில் எந்த ஒரு பெசிலிடிஸ்சும் இல்லை எனக் கூறுகிறார். பிறகு சத்யா சுருதியை மிரட்ட சுருதி அந்த இடத்திலிருந்து போய்விடுகிறார். பிறகு தருண் சத்யா மற்றும் வருணிடம் சென்னைக்கு போகலாம் என்று கூற சத்யா இப்ப பேச வேண்டாம் என் அப்பாவை நானே பார்த்துக்கிறேன் என்று கூறுகிறார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment